இவர்களது பேச்சு புரிந்தது போல குழந்தையும் இவர்களுடன் சேர்த்து சிரித்தது
ரிஷி, தனக்கு அம்மா இல்லை என்பதை பருவதம் அம்மாளை பார்க்கும் போது எல்லாம் மறந்து விடுவான். அந்த அளவிற்கு ரிஷியின் மீது பாசத்தை பருவதம் கொட்டினார்.
ராஜசேகர், இறந்த பின்பு அவரது பாசம் இன்னும் அதிகம் ஆயிற்று. மகனை பிரிந்து அத்தை வாடுவது பிடிக்காது அவர் மன அமைதிக்காக ரிஷியும் வீட்டில் இருக்க சம்மதித்தான்.
அத்தையின் சொத்து தொழில் விஷயத்தில் சில குளறுபடிகள் இருப்பது போல அவனுக்கு தோன்றியது. அதை சரி செய்யவும் ரிஷி இங்கு இருந்தான்.
அவசரம் ஏற்பட்டால் மட்டுமேயெ தனது தொழிலை பார்க்க அவன் சென்னை சென்று வருவான்.
சொல்லுங்க அத்தை என்ன பேசணும்? என்று அக்கறையுடன் பருவதம் அம்மாளிடம் கேட்டான்.
நாளைக்கு என் அண்ணனை இங்க வர சொல்லு... நான் கொஞ்சம் அவர்கிட்ட பேசணும்.
அப்படி என்ன அப்பாகிட்ட பேச போறீங்க? சொன்ன நானும் தெரிஞ்சுப்பேன் இல்ல.....
ரிஷியின் கேலி பேச்சு பருவதம் அம்மாளுக்கு புதிதாக இருந்தது . அப்பாவின் பேச்சை எடுத்தாலே அவனது முகம் இறுகி விடும்.
ஏதோ, தனது தந்தை தான் அவனது காதலை பிரித்து விட்டது போல ரிஷி எண்ணினான். கீதா சென்ற ஒரு மாதத்தில் அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டான். தொழில் விஷயமாக மட்டுமேயெ அவரிடம் பேசினான்.
மனம் தாங்காது சதாசிவம் ரிஷியின் மனதை மாற்றுமாறு தங்கையின் உதவியை நாடினார்.
பருவதம் அம்மாள் எவ்வளவு முயற்சி செய்தும் ரிஷியின் மனதை மாற்ற முடியவில்லை. தனது அண்ணனை ரிஷி அப்பா என்று கூப்பிடுவதை கூட நிறுத்தி விட்டான் என்பது அவர்க்கு நன்றாக புரிந்தது.
ஆனால், இன்று ரிஷியே தனது தந்தை பற்றி பேசுவது அவர்க்கு ஆச்சரியமாக இருந்தது.
பருவதம் அம்மாளின் முகத்தின் முன்பு ரிஷி தனது இரு கைகளை கொண்டு ஆட்டினான். என்னத்தை நாளைக்கு வர போற உங்க அண்ணனை பத்தி இப்பவேயே யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா ?
அது எல்லாம் இல்லடா? நாம ராஜகுட்டிக்கு பெயர் வைக்க போறோம் அத பத்தி பேசத்தான் உங்க அப்பாவை வர சொன்னேன். நீ சீக்கிரம் போன் செஞ்சு வர சொல்லு சரியா? என்று பருவதம் அம்மாள் கேட்டும் ரிஷியிடம் பதில் வராதது கண்டு ரிஷியை பார்த்தார்.
ரிஷியோ, தோட்டத்தின் நடுவேயே பூக்களுக்கு இடையில் தன் மனம் கவர்ந்தவள் தேவதை போன்று நடந்து வருவதை பார்த்து கொண்டு இருந்தான்.
குழந்தையை பார்க்க வந்த கீதாவிற்கோ ரிஷி அங்கு இருப்பதை கண்டதும். அவளது இதயத்தின் வேகம் கூடியது.
ரிஷியும் அவளது அழகை கண்களினால் பருகுவதை கண்டு கீதாவின் முகம் எங்கும் வெட்க சிவப்பு கொண்டது.
இவர்கள் இருவரின் முக மாறுதல்களை அங்கு இருந்த பருவதம் அம்மாளும் பார்த்து கொண்டு இருப்பதை இருவரும் அறியவில்லை.
(சதாசிவமும் பருவதம் அம்மாளும் கீதா ரிஷியின் காதலுக்கு எதிரிகளா? இல்லை நண்பர்களா? என்பதை அடுத்த அத்தியாத்யத்தில் பார்ப்போம்....)
Thank you Friends…..
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}