முன்பு சொன்னது போலவேயே உன் இஷ்டப்படி இந்த வீட்டில் நீ இரு....
யாரும் அதில் தலையிட மாட்டார்கள் சரியா? போ இப்பொழுது போய் சாப்பிடு...... என்று கூறிய பருவதம் அம்மாளை நன்றியுடன் கீதா பார்த்தாள்.
ரிஷிக்கு தனது பெரிய அத்தையை கட்டி கொள்ளவேண்டும் போல இருந்தது. சீக்கிரம், கீதாவை பற்றிய உண்மைகள் அனைத்தையும் கண்டுபிடித்து அத்தையிடம் கூறவேண்டும்.
ராஜசேகர் வாழ்கை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
அக்கா, என்ன இருந்தாலும் நீங்கள் செய்வது சரியில்லை. நீங்கள் அவளை ரொம்பவும் நம்புகிறீர்கள்.... அவள் நெற்றியில் குங்குமம் வைக்க நீங்கள் எப்படி அனுமதிக்க முடியும். கணவனை இழந்தவள் எப்படி இருப்பது தப்பு என்று தெரிந்தும் என் நீங்கள் அவளை
திட்டவில்லை?.... என்று கேட்ட சிவகாமிக்கு ரிஷி இப்போது பதில் அளித்தான்.
சின்னத்தை, அதான் பெரியத்தை சொல்லிட்டாங்களேயே காலம் பதில் சொல்லுன்னு அப்புறம் என் நீங்க அவசர படுறிங்க? பெரியத்தை செய்யும் எல்லா செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
கண்டிப்பா, சீக்கிரம் உண்மை வெளில வரும். பொறுத்து இருந்து பார்ப்போம்.
ரிஷியின் பதில் சிவகாமிக்கு மேலும் ஆத்திரத்தை அதிக படுத்தியது.வந்து ஒரு நாள் முழுசா முடில அதுக்குள்ள எல்லாரும் கைக்குள போட்டுக்கிட்டா?
இனியும் நாம சும்மா இருக்கக்கூடாது. எதாவது செஞ்சு தான் ஆகணும். இனி, நா அவள விரட்டுறதுல அவ இந்த வீட்ட விட்டு ஓடணும் பாத்துக்கிறேன் நானா அவளனு?
நாசமபோறவான், செத்தும் இந்த ராஜசேகர் என்ன நிம்மதியா வாழவிட மாட்டேங்குறான். என் தம்பி பெண்யா கல்யாணம் பண்ணிட்டு இருந்த இன்னைக்கு இப்படி செத்து இருப்பநானா ? எவ்ளோ பேச்சு பேசுன? அதான் உன் பிள்ளை கூட வாழ கூட முடியாம போய் சேர்ந்துட்டா?
இரு, உனக்கு துணையா உன் பிள்ளையும் அனுப்பி வைக்குறேன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்.
பருவதம் அம்மாள் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்த்து கொண்டு இருந்தார். அவரால, இது ராஜசேகர் குழந்தை இல்லை இன்று சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த குழந்தையின் தாய், யார் என்று எப்படி கண்டுபிடிப்பது?
ப்ரியாதான், ராஜசேகர் மனைவி என்றால்? அவள், நெற்றியில் குங்குமம் எப்படி வைக்க முடியும். அதற்கு அவள் கூறிய காரணத்தை யாராலும் ஏற்று கொள்ள முடியாது. அவளை பார்த்தால் பணத்திற்காக இங்கு வந்து இருப்பவள் போல தோன்றவில்லை.
குழந்தைக்கு அவள் பால் கொடுக்க மறுத்து அவள் கூறிய காரணமும் பொய்யோ என்று பருவத்தம்மாளுக்கு தோன்றியது. இவ்வளவு நடந்தும் பருவதத்தால் எனோ ப்ரியாவை தவறாக நினைக்க முடிய வில்லை.
ரிஷி, பெண்களிடம் பேசவேயே யோசிப்பான். ஆனால், ப்ரியாவிடம் மட்டும் காலைலயில் கோபத்துடன் நடந்து கொண்டான். அடிக்க கூட செய்தான். அதை ப்ரியாவும் எதிர்க்க வில்லை. ராஜசேகர்க்காக அப்படி நடந்து கொண்டான் என்று நினைத்தால் இப்பொழுது அவனது பேச்சில் எதோ உரிமை இருப்பது போல தெரிகிறதேயெ......
சிவகாமியிடம் அவன் பேசியே விதமேயே சரி இல்லையே ..... நேற்று வரை இறுகிய முகத்துடன் இருந்தவன் முகம் இப்பொழுது முகம் எங்கும் பிரகாசத்துடன் இருக்கிறான்.
ரிஷியின் தந்தை கூறியது அனைத்தும் பருவத்திற்கு ஞாபகம் வந்தது. ரிஷியின் மனதை மற்ற தான் அவரும் பெரும் பாடு பட்டார்.
இந்த பிரியா யார்? ஒரு பக்கம் தனது பேரனை தன்னிடம் கொடுத்தவள். இவள், ராஜசேகர்க்கு என்ன உறவு முறை? ரிஷிக்கும் இவளுக்கும் முன்னரேயே தெரியுமா? எல்லாம் யோசிக்க யோசிக்க பருவத்திற்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.
இப்பொழுது, தனக்கு துணையாக தனது அண்ணன் மட்டுமேயெ இருக்க முடியும் என்று முடிவு செய்தார்.பருவதம், குழந்தையை தூக்கி கொண்டு ரிஷியை தேடி சென்றார்.
ரிஷி, தோட்டத்தில் இருப்பதை கண்டு அங்கு சென்றார். ரிஷியோ, தனது பெரிய அத்தை வருவது தெரியாது தீவிர யோசனையில் ஆழ்ந்து இருந்தான்.
ரிஷி என்ற அழைப்பில் திரும்பி பார்த்தான். அங்கு இருந்த பெஞ்ச்யில் பருவதம் குழந்தையை மடியில் போட்டு கொண்டு அமர்ந்தார்.
அவர் அருகில் சென்ற ரிஷி என்ன அத்தை? அதிசயமா தோட்டத்துக்கு வந்து இருக்கீங்க? எப்பவும் ரூம்குள்ள தான் இருப்பிங்க? என்று அவர்களை பாசத்துடன் கேட்டான்.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வெளி காத்தும் குழந்தை மேல படுறது நல்லது அதான் வந்தேன்.
அப்ப, உங்க பேரனுக்காக தான் வெளியில வந்து இருக்கீங்க .போற போக்க பார்த்த என்னை மறந்துட்டு உங்க பேரன் கூடவேயே இருந்துடுவீங்க போல..... என்று ரிஷி கிண்டலாக கூறினான்.
போடா போக்கிரி!! என்று சிரித்து கொண்டையே பருவதம் ரிஷியின் முதுகு மீது செல்லமாக ஒரு அடி வைத்தார்.
அடப்பாவி, வந்த ஒரேயே நாளில் எங்க அத்தைகிட்ட ஆடி வாங்க வச்சுட்டா டா நீ? என்று கூறி குழந்தையை பார்த்து சிரித்தான்.