அவள் ‘இல்லை’ என தலையாட்டினாள்.
அவள் அருகே அமர்ந்தவர் அவளது தலையைக் கோதிவிட்டார்.
“காலை நல்லா நீட்டி படு. தூங்குவதற்கு முயற்சி பண்ணு.”
அதன் பிறகு அவர் அவளிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.
அவளது தலையைக் கோதியவாறே அவளது தோளிலும் மெல்லத் தட்டிக்கொடுத்தார்.
அத்துடன் மெல்லிசையும் சேர்ந்தது. அதனால் அவளுக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது.
அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்த பிறகே அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
அறையின் கதவை மெதுவாக சாற்றிவைத்துவிட்டு வெளியேறினார்.
கல்லூரிக்கு வந்துவிட்டாலும் யுகேந்திரனால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
மதிய நேரமே கிளம்பிவிட்டான்.
அவனைக் கண்டதும் வனிதாமணிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்குப் பதில் சொன்னான்.
“நானா வயித்துவலின்னு சொல்லி படுத்துக்கிடந்தேன்?”
யுகேந்திரன் ஏதோ சொல்லப்போக கிருஷ்ணவேணி அவனைக் கையமர்த்தினாள்.
சாருலதா வேண்டுமென்றே பேசுகிறாள் என்று அவளுக்குப் புரிந்தது.
அவளுக்கு ஏனோ தன்னைப் பிடிக்கவில்லை. அது ஏனென்றும் தெரியவில்லை.