அவர்கள் சாருலதாவைக் கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பிக்க அவள் எரிச்சல் தாளாமல் உள்ளே வந்தாள்.
என்னதான் மகேந்திரன் காலையில் கிருஷ்ணவேணி உடல்நிலை சரியில்லாமல் போயிருந்ததை கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்குக் கிளம்பினாலும் அங்கே அவனால் வேலையில் சரிவர ஈடுபடமுடியவில்லை. இதோ இப்போது கிளம்பியே வந்துவிட்டான்.
அதைக் கண்ணார கண்டவளுக்கு கிருஷ்ணவேணி மீது கோபம் கோபமாய் வந்தது.
அவள் எப்படியோ அந்த வீட்டில் உள்ளவர்களை எல்லாம் மயக்கி வைத்திருக்கிறாள்.
யாரோ எப்படியோ போகிறார்கள். ஆனால் மகேந்திரன்?
அவனுக்காக தான் தீட்டியிருக்கிற திட்டம்?
எத்தனை வருடக் கனவு?
இவர்கள்தான் தன்னைப் பெண் கேட்க மாட்டேன் என்று அடம் பண்ணிய மாதிரி இருக்கிறார்கள்?
தனது பெற்றோராவது மாப்பிள்ளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ே. ஓரளவு நடுத்தர குடும்பம்தான். எனக்கிருக்கிற அறிவுக்கு நான் படித்து முடித்த உடனே வேலை கிடைச்சிடும். நான் உன்னை வசதியா வச்சுப் பார்த்துப்பேன். நீயும் வேலைக்குப் போனா இன்னும் வசதியா இருக்கலாம். தயவு செய்து நீ அவனோட பழக்கத்தை விட்டுரு. பணக்கார பசங்களை நம்பவே முடியாது. அவன் உன்னை ஏமாத்திடுவான்.”