15. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா
முதலில் திகைத்தாலும், சுதாரித்துக் கொண்ட ஹேமாவிற்கு ஷ்யாமின் முகத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
ரேஷ்மி சொன்னது ஹேமாவின் மனதிலும் இருக்கும் ஆசை தான்.
‘ஷ்யாம் விட நல்ல பையனை நீங்க கண்டுபிடிக்க முடியுமா??’ என ரேஷ்மி கேட்டதன் எஃபெக்ட்டில் மகனை வாஞ்சையுடன் பார்த்தவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது.
ஷ்யாம் வித்தியாசமாக விழித்துக் கொண்டிருந்தானே தவிர அதிர்ந்து போனது போல தோன்றவில்லை.
இது அவனுக்கு புதிய செய்தி இல்லையோ??
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்களுக்கும் எனவும் சில கடமைகள் இருக்க தானே செய்கின்றன.
சுமியின் மறைவுக்கு பின் மகளுக்கு துணையாக இருந்திருக்க வேண்டியவன் இப்படி அவளை முழுக்க புறக்கணித்தால் பின் அவள் வேறெப்படி பேசுவாள்...
இந்த எண்ணங்கள் மனதில் ஓடவே, ரேஷ்மியின் மீது தனி பரிவு தோன்ற, அவளின் பக்கத்தில் சென்ற ஹேமா,