“ரேஷூ உன் வருத்தம் எனக்கு புரியுது. ஆனாலும் வயசுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகனும்... சரி, இப்போ அதை பத்தி பேச வேண்டாம்... நாம பேசிட்டு இருக்க விஷயத்தை முதல்ல பார்ப்போம்... நீ சீரியஸா தானே கேட்ட? உனக்கு ஷ்யாமை பிடிச்சிருக்கா? நீ சொன்னது போல உனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தா உனக்கு சந்தோஷமா??” என மிகவும் அமைதியான குரலில் கேட்டாள்.
ஹேமாவின் இந்த ‘அமைதி’ அப்ரோச், ரேஷ்மியையும் அமைதிப் படுத்தியது. கூடவே ஹேமா கேட்ட கேள்வி அவளுள் புது விதமான ரசாயன மாற்றத்தை உண்டாக்க, முகம் சிவக்க ஆம் என தலை அசைத்தாள் அவள்.
ரேஷ்மியின் முகத்தில் தோன்றிய வெட்கம் + சிவப்பு & அமைதி ராகவியை வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு ஆச்சர்யப்படுத்தியது.
“வாட்ஸ் கோயிங் ஆன்? ரேஷூ என்ன பொண்ணு மாதிரி எல்லாம் பீகேவ் செய்ற?” எனக் கேட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
நீயும் விமலுமே முன்னாடி நின்னு எல்லாம் செய்ங்க. நான் இருந்தாலும், இல்லைனாலும் அவளுக்கு அம்மா, அப்பா நீங்க தான்” என்றான்.
ரோஷனி அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த போது கமல் அங்கே இல்லை! கிளம்பி சென்றிருந்தான்.
கமல் எனும் புதிர் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டதாக அவளுக்கு தோன்றியது!