(Reading time: 13 - 26 minutes)

“”சரி திஷா டியர் ரொம்ப டயர்டா தெரியுற..கொஞ்சம் ரெஸ்ட் எடு நைட் நிறையவே பேசலாம்”,என கண்சிமிட்டி தன் மொபைலை எடுத்துச் சென்றான்.

பெண்ணவளுக்கு நாணமும் பூரிப்பும் கலந்து மனம் மயங்கும் நிலையில் இருந்தாள்..அவனின் கடைசி வரிகள் இன்னுமும் முகத்தில் வெப்பத்தை ஏற்படுத்துவதாய் இருக்க அதுதான் ஆச்சரியமாகவும் உணர்ந்தாள்.

“உணர்ச்சியற்ற பொம்மைனு நினைச்சுட்டு இருந்த என்னையே முகம் சிவக்க வைக்குற புருஷன்.கடவுள் ஆடும் ஆட்டத்தின் வியப்பு என்றுமே குறையாது தான் போலவே..”,என்றெண்ணியவள் உதட்டோர சிரிப்போடே உறங்கியும் போனாள்.

மாலை எழுந்து தயாரானவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் செல்ல தயாரானான் அபினவ்.அவன் வேகமாய் முதலில் கீழே வந்துவிட அவன் தந்தை அவனிடம்,

“ஏன்டா அந்த பொண்ண கூட இருந்து கூட்டிட்டு வர மாட்டியா..மாடில இருந்து இறங்க கஷ்டப்பட போறா”

“ப்பா..இத்தனை வருஷம் அவ மாடியே ஏறாமயா இருந்துருப்பா..அவளும் நம்மள மாதிரி தான் கொஞ்சம் ஸ்பெஷல் சைல்ட் ஆப் காட் அவ்ளோ தான்..அதுக்காக எப்போ பாத்தாலும் அவளை பேபி மாதிரி ட்ரீட் பண்ணாதீங்கப்பா..”

“சரி டா தெரியாம சொல்லிட்டேன்..ஆள விடு”,என கைகூப்பி சிரிக்க,

“அந்த பயம் இருக்கனும்.ம்ம் அப்பறம் நாளைக்கு எங்க பெட் ரூமை கீழே இருக்குற ரூம்க்கு மத்திக்குறேன்ப்பா..ஜானகிக்கா வந்தா க்ளீன் பண்ண சொல்லிடுங்க..”

“ம்ம் அதானே பாத்தேன்..நடக்கட்டும் நடக்கட்டும்”,என அவர் பலமாய் சிரிக்க. படியில் அவள் வரும் அரவம் உணர்ந்து அபி வேகமாய் தன் தந்தையின் வாயை மூடிவிட்டு காரை நோக்கிச் சென்றான்.

இதை அனைத்தையும் மாடியிலிருந்து கேட்டவளுக்கோ கணவன் என்பதை தாண்டி முதல் முறையாய் அவனை நண்பனாய் பார்க்க தோன்றியது..தன்னை சாதாரணமாய் பார்க்க எத்தனை பேரால் முடியும்.எத்தனை சிநேகத்தோடு பேசுபவர்கள் ஆனாலும் ஒரு முறையேனும் சிறிதளவு பரிதாபம் அவர்கள் கண்களில் எட்டிப்பார்க்கும்..அவனின் இந்த விளையாட்டுப் பேச்சு ஏனோ அவனை ரசிக்க வைத்தது.

மெதுவாய் கீழே வந்தவள் மாமனார் மாமியாரிடம் விடைபெற்று கிளம்பினாள்.காரருகே அவளுக்காக காத்திருந்தவன் கதவை திறந்து அவள் அமரும் வரை பொறுமையாய் உதவி செய்து பின் காரை கிளப்பினான்.

அவள் வீட்டிற்குச் சென்றதிலிருந்து அவனிடமிருந்து விழியகற்ற முடியாமல் தவித்தாள் பெண்ணவள்.அத்தனை எளிமையாய் அத்தனை பாசமாய் தன் தாயிடமும் தம்பியிடமும் பேசிக் கொண்டு அவர்கள் தருவதை வாங்கி சாப்பிட்டவாறே தன்னையும் கவனித்து என ஏதோ 30-40 வருட பழக்கம் போல் உரிமையாய் இருந்தான்.

இரவு உணவை முடித்து இருவருமாய் கிளம்ப காரை ஸ்டார்ட் செய்தவன்,”என்ன திஷா பேபி என்னை கண்ணாலேயே முழுங்கிட்டு இருந்தியே என்ன விஷயம்??”,என அழகாய் சிரித்தான்.

கண்டுகொண்டானே என்ற அவள் எண்ணம் கண்களில் அப்பட்டமாய் தெரிய சட்டென அவன் போட்ட ப்ரேக்கில் நினைவிற்கு வந்தவள் என்னவென்பதாய் பார்க்க,

“என்ன கண்ணு டியர் உனக்கு..இந்த கண்ணும் அந்த மூக்குத்தியும் உனக்கு எப்பவுமே அடட் ப்யூட்டி திஷா..”,என ஆழ்குரலில் கூற பெண்ணவளின் இதயமோ தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது.

வாழ்வின் அவளுக்கான முதல் பாராட்டு..அதுவும் இத்தனை காதலோடு நினைக்க நினைக்க மனதின் பரவசத்தை ஏனோ கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை..அவள் நிலை உணர்ந்தவனும் மெல்லிய புன்னகையோடு காரை கிளப்பினான்.

வீட்டிற்கு வந்து இருவரும் ஹாலில் அமர சாரதாவும் ராகவனும் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அபி கீழே இருக்குற ரூமை க்ளீன் பண்ணியாச்சு நைட் அங்கேயே ஸ்டே பண்ணிக்கோங்க..காலைல திங்க்ஸ் எல்லாம் ஷிப்ட் பண்ணிக்கலாம்”

“சூப்பர் ஓ..கே மா..சரி சாப்டாச்சா நீங்க ரெண்டு பேரும்..”

“ம்ம் சாப்டாச்சுடா மருமகனுக்கு இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அங்க?”

“எங்கம்மா ஒண்ணுமே இல்ல..சிம்பிளா முடிச்சுட்டாங்க”,என்றவன் குறும்பாய் திஷானியை பார்க்க அவளோ அப்பட்ட அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

“அடப்பாவி கல்யாண விருந்தே ரெடி பண்ணிருந்தாங்க நல்லா மொக்கு மொக்குனு மொக்கிட்டு இங்க வந்து இப்படி சொல்றானே!!!”

லேசாய் அவளருகில் சாய்ந்தவன்,”ஏ கண்ணழகி சும்மா விளையாட்டுக்கு தான் சொல்றேன்..ஏன் இப்படி மொறைக்குற”,என்று கிசுகிசுப்பாய் கேட்க மாமனார் மாமியார் முன் அவன் செயலில் இன்னுமாய் நெளிந்தவள் சற்றே தள்ளி அமர சாரதாவும் ராகவனும் சத்தமாகவே சிரித்துவிட்டனர்.

“என்ன மருமகளே இப்படி பொழைக்க தெரியாதவளா இருக்க அவன் சொல்லி முடிச்ச அடுத்த செகண்ட் நல்லா நாலு அடி போட வேணாமா..”,என ராகவன் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.