(Reading time: 13 - 25 minutes)

"மா??"

"என் சுயநலத்துக்காக உன்னையும் கூட இத்தனை வருடமா தண்டித்திருக்கேன் ஆதி!"-சட்டென தாயின் வாயை பொத்தினான் அவன்.

"என்னம்மா பேசுறீங்க??நான் உங்க மகன்மா! இந்த உலகத்துல நான் எங்கே இருந்தாலும்,உங்களால நான் அடையாளம் காட்டப்படணும்னு தான்மா விரும்புறேன்!அது எனக்கான தண்டனை இல்லம்மா..!ஒரு விஷயம் சொல்லணும்னா,உங்களுக்கு பையனா பிறந்ததுக்கு நான் பாக்கியம் செய்திருக்கணும்!அதை பற்றி எல்லாம் யோசிக்காதீங்கம்மா!நாம ராஜசிம்மபுரம் போறோம்!எல்லாம் நல்லப்படியா நடக்கும்!"மிகுந்த முதிர்ச்சியுடன் பேசிய தன் ஆருயிர் புதல்வனின் கேசத்தை வாஞ்சையுடன் கோதினார் தர்மா.

"ணோவ்!எங்க இருக்கீங்க?"உடையானின் குரல் கேட்க இயல்பு நிலைக்கு வந்தனர் இருவரும்!!

"மோவ்!நீங்க இன்னும் தூங்கலையா?"

"இல்லையே ஏன்??"

"சும்மா தான் கேட்டேன்!அண்ணன் ஊர்ல இருந்து வந்திருக்காரே,சாவகாசமா பேசலாம்னு வந்தேன்.சரி நீங்க பேசுங்க,நான் அப்பறம் வரேன்!"

"நில்லுடா!அது என்ன அம்மாக்கு தெரியாம அண்ணங்கிட்ட இரகசியம்?"சில நொடிகள் திருதிருவென விழித்தான் உடையான்.

"அ...அ..ஆ...அது...அது...வந்து...ஆங்...ஃபாரின்ல இருந்து சாக்லெட் வாங்கிட்டு வர சொல்லிருந்தேன்,அதான்!வாங்கிட்டு வந்திருக்கீங்களாண்ணா?"இப்போது ஆதி திருதிருவென விழித்தான்.

"சாக்லெட்டா?"

"ம்...கேரமல்,கோ-கோ எல்லாம் போட்டு,மா அதான் பொய் சொல்றேன்னு கண்டுப்பிடிச்சிட்டீங்கல்ல விடுங்கம்மா!"அழுதுவிடுவேன் என்று முகத்தை வைத்துக் கொண்டான் உடையான்.

"அப்போ பொய் தான் சொல்ற,?"

".............."

"சரி போ கண்ணா!அவன் ஏதோ உன்கிட்ட உண்மையை பேசணுமாம்!என்னன்னு கேட்டுட்டு வா!"என்றார் சிரிப்புடன்!தாயின் ஆணையை ஏற்றவன்,புன்னகையுடன் இளவலுடன் சென்றான்.

"என்னடா விஷயம்?"சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எவரும் இல்லை என்று உறுதி செய்தப்பின்னர்,'ஓ' என்று அழ ஆரம்பித்தான் உடையான்.

"என்னடா என்னாச்சு?"மீண்டும் சப்தமாக அழ ஆரம்பித்தான்.

"சொல்லி தொலையேன்டா!"மீண்டும் சப்தம்!!

"சொல்லவே வேணாம் போ!"

"ணோவ்!என்னண்ணா?"

"சரி சொல்லு!"உடையான் தனது நகத்தை சற்றே நாணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய், வெயில் காலம் வேறடா! ஒரே புழுக்கமா இருக்கு!நீ வேற என்னை வறுத்தெடுக்காதே என்னன்னு சொல்லு!"

"சரி சொல்றேன்.ஆனா அம்மாக்கிட்ட நீங்க இதைப் பற்றி பேசணும்!"

"யார் அந்தப் பொண்ணு?"சட்டென தமையன் கேட்டுவிட ஒரு நொடி உறைந்தே போனான் உடையான்.

"ணோவ்?"

"சீக்கிரம் சொல்லு!அப்போ தான் அம்மா உனக்கு பொண்ணு பார்க்கிறதுக்குள்ள போய் பேச முடியும்!யார் அது?பெயர் என்ன?"

"கங்கா!"

"நல்ல பேரு!எந்த ஊரு?"

"இராஜசிம்மபுரம்!"தூக்கி வாரி போட்டது அவனுக்கு!

"யார் அது?"

"அண்ணா...அதான் விஷயமே!"கங்கா யாரென்ற அடையாளத்தை வெளிப்படுத்தினான்.

மீண்டும் மனதில் ஒரு சறுக்கல்!!

"உண்மையா காதலிக்கிறீயா?"அந்தக் கேள்வி உடையானை திடுக்கிட வைத்தது.

"ஆமாண்ணா!"

"எந்த நிலையிலும் உறுதியா இருப்பியா?அந்தப் பொண்ணை தவிர வேற ஒருத்தரை யோசிப்பியா?"

"முடியாதுண்ணா!"

"அம்மா கட்டாயப்படுத்தினால்?"

"அவங்க அப்படி பண்ண மாட்டாங்க!"

"மீறி பண்ணா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.