(Reading time: 18 - 35 minutes)

“ஒரே வாடையா இருக்கு சார். அப்புறம் இந்த வாடையினால் மீண்டும் அவனுக்கு வாந்தி வரும்.”

அவனிடம் மறுப்பாய் பேசியவள் தானே தொடர்ந்து சுத்தம் செய்தாள்.

டெட்டாலைக் கொண்டு அறையை சுத்தம் செய்தவள் மகேந்திரனைப் பார்த்தாள்.

“என்ன?”

“சார். அவனுக்கு கொஞ்சம் டிரஸ்ஸை மாத்தி விடறீங்களா?”

தன் தம்பிக்காக அவள் தன்னிடம் கெஞ்ச வேண்டுமா? யோசித்துக்கொண்டே அவள் சொன்னதை செய்ய ஆரம்பித்தான்.

அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் வனிதாமணி பதட்டத்துடன் வந்தார்.

“என்னாச்சுப்பா?”

பெரிய மகனிடம் விசாரித்தார்.

அவனும் நடந்ததை சொன்னான்.

அவர் யுகேந்திரனை கவலையுடன் பார்த்தார்.

அவனுக்கு முடியாமல் எந்த மாதிரி பாடுபடுவான் என்று கண்கூடாக பார்த்தவர்தானே? அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ையே. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த மாதிரி சமயத்தில் நீ எந்த மாதிரி படுத்துவேன்னு அத்தை சொல்லியிருக்காங்க. அவங்களால் உன்னை சமாளிக்க முடியாது. அவங்களை நீ ஏமாத்திடுவே. அதனால் நான் கூடவே இருக்கப்போறேன். நீ ஒழுங்கா நான் வேளாவேளைக்குக் கொடுக்கிறதை நீ சாப்பிடனும். என்ன சரியா?”

“சரி.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.