மகேந்திரன் வாங்கி வந்த மாத்திரையை சாப்பிட அடம்பிடித்தான்.
“இதப் பாரு. நீ மாத்திரை எல்லாம் சாப்பிட்டாதான் சீக்கிரம் சரியாக முடியும். உன்னோட அண்ணன் நீ இந்த செமஸ்டர்ல நல்ல மதிப்பெண்கள் எடுத்தாதான் நீ விருப்பப்பட்டதை படிக்க முடியும் என்று சொன்னார். நீ இப்படி படுத்திருந்தா எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும்?”
“அண்ணன் சொல்றது இருக்கட்டும். நான் நிறைய மதிப்பெண் வாங்கினா நீ எனக்கு என்ன தருவே?”
“உனக்கு என்ன வேணுமோ கேளு. தர்றேன்.”
“இப்ப சொல்லிட்டு அப்புறம் வாக்கு மாறக்கூடாது.”
“வாக்குன்னு என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே?”
“பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.”
“சரி. நீ என்ன கேட்டாலும் தர்றேன். ஆனால் அதுக்கு நீ என்னைவிட ஒரு பாடத்திலாவது ஒரு மதிப்பெண்ணாவத
...
This story is now available on Chillzee KiMo.
...
சடைத்தது.
வெண்ணிற ஆடை. அதுவும் அவள் வழக்கமாய் அணியும் சுடிதார் இல்லாமல் புதுமாதிரியான உடை. அவனுக்கு அந்த உடையின் பெயர் தெரியவில்லை.
அத்துடன் கழுத்தில் என்ன வைரமா? அவளிடம் ஏது அத்தனை விலை உயர்ந்த நகை? அவனுக்குப் புரியவில்லை.
அவளைப் பார்த்து வனிதாமணியே வாயடைத்துப்போனார்.