“நம்ம கிருஷ்ணவேணியா இது?”
அவரது ஆச்சர்யமான குரலைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வந்தது.
“அம்மா. நான்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். எப்பப்பாரு அந்த சாருலதா கிருஷ்கிட்ட ரொம்ப மட்டமா பேசறா. அவ வாயை அடைக்கத்தான் இந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன்.”
மகேந்திரனுக்கு கவலை அதிகரித்தது.
இத்தனை அழகாய் இருக்கிறவளை எப்படி அவன்கள் கவனிக்காமல் விடுவான்கள். எந்த கலாட்டாவும் நடக்காம இருக்கனுமே.
அவன் பயந்த மாதிரியே தான் நடந்தது.
எல்லோரது பார்வையும் அவள் மீதேதான்.
சாருலதா கூட அதிர்ச்சியில் வாய்பிளந்தாள்.
இல்லாதவள் என்று அவள்தான் எப்போதும் அவளை சீண்டுவாள். அதற்காக அவளுக்கு பதிலடி கொடுக்க என்றே இவ்வாறு அவளை அழைத்து வந்திருக்கிறான் யுகேந்திரன்.
கிருஷ்ணவேணி க
...
This story is now available on Chillzee KiMo.
...
ோதையில் இருக்கிறாளா? மயக்கத்தில் இருக்கிறாளா? என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.
அதை ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் அவளை இந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று அவனது அறிவு சொல்ல அவளை கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச்சென்றான்.
அதைக் கண்ட சாருலதாவிற்கு மனம் கொதித்தது.