“நீ இன்னிக்கு ஆஃபீஸ் போகவேண்டாம்.. வீட்டுல் இரு! இன்னும் கொஞ்சம் முக்கியமான் வேலை இருக்கு.. புரிஞ்சுதா?”
“சரி” என்று தலையை அசைத்தவள் உள்ளம் மட்டும் லேசாக வெம்பியது.
எத்தனையோமுறை, அவரை எதிர்கொண்டு, அவருக்கு எதிராக தன் மறுப்பை சொல்ல உள்ளம் முயலும் ஆயினும் இதுவரையில் ஒருமுறை கூட வாயத்திறந்து பதில் சொல்ல தைரியம் இல்லை. மற்றவை சரி. இளமாறனை நினைக்கும்போது உள்ளம் அனலாய்க் கொதித்தது. அவனுடைய காதலையே பெற முடியாதுபோகும் போது அப்பவின் வார்த்தைகளை எதிர்த்து என்ன பிரயோஜனம். அப்படியே அங்கு சென்று அவனைப்பார்த்தாலும் நிச்சயம் இவளுக்காக அவன் வரிந்து கட்டிக்கொண்டு வரப்போவதில்லை.. மாறாக இவளைக் கீறி இன்னும் வேதனையை அதிகக்படுத்துவான்..
“என்ன வாழ்வு இது.. இளவரசியாக வளர்ந்தவள்… காலில்விழுந்து நைந்துபோனதுதான் மிச்ச்ம்… “
இதயம் கொந்தளிக்க படுக்கையில் போய் விழுந்தாள்… இதுவரை அடக்கியிருந்த கண்ணீர் தாரை தாரையாய் தலையணையை நனைத்தது….
விஸ்வத்தின் அலுவலகம்
கண்கள் சிவக்க தன் மேசையின் மீது பரப்பப்படிருந்த புகைப்படங்களை எரிக்கும் அளவுக்கு வெட்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க காரியதரிசி அவர் அருகே கைகள் கட்டி நின்றிருந்தான். “மணி..இது ஏன் ஃபேக் ஃபோட்டோவா இருக்கக்கூடாது?”
“ஐயா.. நானும் முதல்ல அப்டிதான் நினைச்சேன்.. அந்த இன்ஸ்பெக்ட்டர் நம்ம பாப்பாக்கிட்டயும், அந்தப்பயக்கிட்டயும் கைப்பட எழுதிவாங்கின ஸ்டேட்மென்ட் பேப்பர் வச்சிருக்க்கான்”
“அவனா நாலுத்தட்டு தட்டி கேட்ட்கவேண்டியதுதானே..”
“ஐயா…அவன் அதுக்கெல்லாம் மசியுற ஆள் இல்ல… இது நாளைக்கு பேப்பருக்கு போச்சுன்னா.. நம்ம பாப்பா பேரு கெட்டுடும்…முதல்ல சரி கட்டி எல்லத்தையும் வாங்கிக்கிட்டு.. அப்புறம் இன்ஸ்பெக்டரையும் அந்த பயலையும் நல்லத் தட்டி கைய கால எடுக்க வேண்டிதான்…”
“மணி, இப்போதைக்கு அந்த இன்ஸ்பெக்ட்டர் கேட்டத கொடுத்து அவன் வாய அடை, இது மட்டும் உண்மையா இருக்கிற பச்சத்தில இவனுக இரண்டுபேத்தையிம் மொத்தம தட்டலாம்.. இப்போ நம்ம டிடைக்டிவ் ஹரீஷ்கு கால் பண்ணு!”
“சரிங்க ஐயா..” – மணி. மணி வெளியேற.. இன்னும் ஆறாத கோபத்துடன் இளமாறன் கீர்த்தனாவின் கழுத்தில் தாலி கட்டும் புகைப்படத்தை எரித்துத் தள்ளும் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் விஸ்வம்.
தொடரும்
{kunena_discuss:1120}