கண்கள் நெருப்பு போல் எரிய மெல்ல மெல்ல தன் கண்களைத் திறந்தான் வ்ருதுஷ்..
தன் எதிரே அமர்ந்திருந்த க்ரியாவைக் கண்டு மெலிதாக புன்னகைத்தவன், “எல்லாரும் வந்திருக்காங்களா..??”, எனக் கேட்டான்..
ஆமாம் என்பது போல் தலையசைதவள், “ரொம்ப பயம் காட்டிட்ட எங்களுக்கெல்லாம்..”, என்றாள் நடுக்கத்துடன்..
“இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இன்னுமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கனும்..”, என்றான் சோர்வுடன்..
“இதுல உன் தப்பு எதுவும் இல்லை வ்ருதுஷ்.. இதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால் அது நடந்தே தீரும்..”, என்றது அகிலன்..
அவனின் பேச்சை அமோதிப்பது போல் தலையசைத்தவன் மெல்ல படுக்கையை விட்டு எழுந்தமர்ந்து, “அடுத்து என்ன அகிலா..??”, கேள்வியாக..
“சருகு காடு..”
இன்னும் ஒரு இரண்டு அல்லது மூன்று ud களில் இக்கதை முடிந்து விடும்..
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}