(Reading time: 16 - 32 minutes)

“ஐயையோ கண்டுபிடிச்சுட்டியா”,என போலியாய் அதிர்ந்தவனும் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

றுநாள் அவனுக்காய் பார்த்து பார்த்து சமைத்து அலுவலகத்திற்கு பேக் செய்து அவனுக்கான உஉடையிலிருந்து அனைத்தையும் தயார் செய்து வைத்தாள்.அவனும் அவசர அவசரமாய் கிளம்பியதில் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்.அதைக் காணும் இதை எங்கே என அனைத்தையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு தன்னவனை நினைத்து மனம் இன்னுமே மென்மையடைந்ததாய் தோன்றியது..

அவளை சாதாரணமானவளாய் அவனைப் போன்ற ஒருத்தியாய் தான் ஒவ்வொரு முறையும் காண்கிறான்.எப்படி அதட்டிஉருட்டி வேலை வாங்குகிறான்.அப்போ எல்லோரையும் போன்று தான் நானுமா..என்னாலயும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் தான்.நானா தான் எதையோ போட்டு குழப்பிட்டே இருக்கேன்..”என்று தன் சிந்தனையில் உழன்றவளை கன்னத்தில் பதிந்த அழுத்தமான முத்தம் நடப்புகிற்கு அழைத்து வந்தது.

தன்னவனை நோக்கித் திரும்பியவள் கண்களுள் அவனை நிறைக்க,”திஷா பேபி..மிஸ் யூ பேட்லி..சாரி பேபி லேட்டா எழுந்ததுனால இவ்ளோ டென்ஷன்.ஈவ்னிங் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்துரேன் சரியா..ஹவ் டு கோ..பை டா என லேசாய் சாய்த்து தன் பாணியில் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றான்.

“பாத்து போய்ட்டு வாங்க”,என வேகமாய் கூறியவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்து கிளம்பினான்.

மதிய நேரம் வரை சாரதாவோடும் ராகவனோடும் பேசியவாறு பொழுதை கழித்தவளுக்கு அவர்கள் உறங்கச் சென்றப் பின் என்ன செய்வதென தெரியாமல் சுற்றி வந்தாள்.

“அவர் சாப்டாரா என்ன பண்ணிட்டு இருக்காரு  தெரிலையே..”,என அவளள் யோசித்து முடிக்கும் முன் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“ஹாய் திஷா டியர் என்ன பண்ற சாப்டியா?நா இப்போ தான் லஞ்ச் முடிச்சேன்..டேஸ்ட் செமயா இருந்தது..லவ் யூ டீ பொண்டாட்டி..”

அதை பார்த்தவளுக்கு ஏதோ அவன் தன் எதிரிலேயே அமர்ந்து அதை தன்னிடம் கூறுவது போன்றதொரு பிரமை..மனம் சிலிர்க்க அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு மனது நிலையில்லாமல் தவிக்க என்ன செய்வைதென யோசித்தவள் சாருவிற்கு அழைக்கலாம் என முடிவு செய்து கால் செய்தாள்.

“ஹாய் திஷானி எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் சாரு..நீங்களும் குட்டியும் எப்படியிருக்கீங்க..ஆபிஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிடேனா?”

“நாங்களும் சூப்பரா இருக்கோம் டா..இல்ல இல்ல இன்னைக்கு லீவ் தான் ரொம்ப மொக்கையா இருந்துச்சு சோ ஆபீஸ் மட்டம் போட்டாச்சு..”

“ஓஓ..”

“என்னாச்சு டா எதுவும் ப்ராப்ளமா திஷானி குரலே சரியில்ல..அபி எங்க??”

“எப்படி கண்டுபிடிச்சீசீங்க!!அவ்ளோவா தெரியுது..அவர் ஆபீஸ் ஜாயின் பண்ணிடாரு இன்னைக்குதான்..”

“ஓ அப்போ இது பசலை நோயா!!தலைவனை காணாமல்..ஹா ஹா”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சாரு..இது வேற எப்படி ஆரம்பிக்குறதுனு தெரில..அதான்..”

“சரி ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாமா பேசலாம்”

“ம்ம் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையா வீட்டுக்கு வாங்களேன் ..குட்டியும் அழைச்சுட்டு வறீங்களா?”

“ம்ம் சரி டா வரேன் அவ தூங்குறா எழுந்தவுடனே வரேன்..”

“ம்ம் ஓ.கே சாரு..பை..”

மாலை ஐந்து மணியளவில் சாரு அங்கே வர திஷானி அவளை மாமனார் மாமியாருக்கு அறிமுகப் படுத்தினாள்.

“வாம்மா அபினவ் சொல்லிருக்கான் உன்னைபத்தி..நேர்ல பாத்ததுல ரொம்ப சந்தோஷம்…அடடா குட்டி பொண்ணு பாட்டிகிட்ட வாங்க..என்ன சாப்டுறீங்க”,என மேலும் சில நிமிடம் பேசிவிட்டு திஷானி தங்களறைக்கு அவளை அழைத்துச் செல்ல குழந்தை பெரியவர்களோடு விளையாட ஆரம்பித்திருந்தாள்.

“சொல்லுங்க திஷானி என்னாச்சு முகமே சரியில்ல..”

“அது வந்து எப்படி சொல்றதுனு தெரில சொல்லலாமானு கூட தெரில ஆனா நா ரொம்பவே குழம்பிருக்கேன் சாரு..ஆனா எனக்கு இதை இப்படியே கொண்டு போக தோணல..”

“நீங்க பேசுறதுலயே தெரியுது விஷயம் கொஞ்சம் சென்சிட்டிவ்னு..உங்க ரெண்டு பேரோட பெர்சனலா..அபி எதுவும் உங்ககிட்ட??”

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல..நாங்க பாண்டிச்சேரி போய்ருந்தோம்..நல்லா தான் போச்சு எல்லாம்..கடைசி நாள் நா தான் லூசு மாதிரி..என்ன மென்று முழுங்கி விஷயத்தை கூறினாள்.

ஆதரவாய் அவள் கைப்பற்றி அழுத்தியவள்,”திஷா உங்க பயம் நியாயமானது தான் ஆனா அதே நேரம் 100% அப்படிதான் நடக்கும்னு இல்லையே..ஏன் நீங்க பாசிட்டிவ் சைடையும் யோசிக்க கூடாது..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.