“கரெக்ட்தான் ஆனா நா நினைக்குறது நடந்துட்டா அப்பறம் அவருக்கு தான கஷ்டம் சாரு..என்னையும் குழந்தையும் வச்சுட்டு ரொம்பவே கஷ்டபடுவாரு..”
“திஷானி குழந்தை மாதிரி பேசுறீங்க நீங்களே..அபி உங்களை என்னைக்குமே கஷ்டமா நினைக்க மாட்டாங்க..அப்படி நினைக்குறவங்களா இருந்தா தானே விரும்பி போய் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணணும்?
இப்போதைக்கு இந்த யோசனையை கொஞ்சம் ஓரம் கட்டி வைங்க எனக்கு தெரிஞ்சு நீங்க நடந்த விதத்தை வச்சு அவரே உங்களுக்கு கொஞ்சம் டைம் குடுப்பாங்கனு தான் தோணுது..ஒருத்தரை ஒருத்தர் இன்னும் புரிஞ்சு லவ் பண்ணி வாழ்க்கை ரசிச்சு வாழுங்க அப்பறம் தாம்பத்யம்ங்கிறது அதன் போக்கில் நடக்கும் அதுக்கு அப்பறம் நீங்க இந்த கவலையெல்லாம் படலாம்..
இப்போவே இவ்ளோ யோசிச்சு புதுமண தம்பதிகளுக்கான வசந்த காலத்தை விட்றாதீங்க..மோர் தன் எனிதிங் உங்க காதல் மட்டும் தான் வாழ்க்கை முழுவதற்குமான நிலையான ஒரு விஷயம்..சோ மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான்..சரியா?”,என முன்தலையை வருடிக் கேட்க சட்டென யோசிக்காமல் சாருவின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“புரியுது சாரு..கண்டிப்பா நீங்க சொன்ன எல்லாத்தையும் மனசுல வச்சுக்குறேன்.என்ன தான் நீங்க அவரு ப்ரெண்ட்னாலும் இந்த விஷயத்துல எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க தான?”,என பாவமாய் கேட்டாள்.
“திஷானி..இந்த நிமிஷம் வரை நா உங்க ப்ரெண்டா தான பேசிட்டு இருக்கேன்..எனக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருக்கனும் அதான் முக்கியம்..சோ எப்போ என்ன குழப்பம்னாலும் என்கிட்ட மனசுவிட்டு பேசுங்க..சரியா?”
“தேங்க் யூ சோ மச் சாரு..நா இவ்ளோ குழப்பவாதியே கிடையாது..இப்போ தான் இப்படி ஆய்ட்டேன்..ஒரு வேளை மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பிச்சா சரி ஆய்டுவேன்னு நினைக்குறேன்..”
“ம்ம் குட் எல்லாம் சீக்கிரமே சரி ஆய்டும் ரிலாக்ஸ் டா..சரி ரொம்ப நேரம் ஆச்சு நா கிளம்பட்டுமா..வீட்ல தேடுவாங்க..”
“இருங்க அவர் வர்ற டைம்தான் உங்களை பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு..அதுவும் போக இதுக்கு மேல பாப்பாவோட தனியா போக வேணாம்..அவரே ட்ராப் பண்ணட்டும்..சொன்னா சொன்னதுதான் வாங்க”,என அவளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் ஹாலிற்கு அழைத்துச் சென்றாள்.
அதற்குள் சாரதா குழந்தைக்கு உணவு ஊட்டிவிட சாருவிற்கோ ஆச்சரியம்,”ம்மா இன்னைக்கு மழை கொட்ட போகுது..என் பொண்ணு ஆர்பாட்டம் பண்ணாம சாப்டுறா!”
“என் செல்லத்தை இப்படி சொல்றியே அவ எவ்ளோ சமத்தா இருக்கா உனக்கு தான் அவளை பாதுக்க தெரில அப்போ”,என அவர் சிரிக்க,
“சாரு அப்படியில்ல உன் ப்ரெண்டையே வளர்த்தவளாச்சே அப்பறம் உன் பொண்ணை வளர்க்குறது என்ன கஷ்டமா சொல்லு”,என ராகவன் அவளுக்கு உஅதவிக்கு வந்தார்.
“அப்படி சொல்லுங்கப்பா..அந்த வானரத்தையே வளர்த்தா இவ எல்லாம் ஒண்ணுமேயில்ல தான்”,எனும்போதே
“அதை ஒரு மனுஷ குரங்கு சொல்ல கூடாது”,என்றவாறு அபினவ் உள்ளே வந்தான்.
“பொறுக்காதே மூக்கு வேர்த்துருமே..”,என்றவாறே தட்டை அவனிடமிருந்து நகர்த்தி அவள் உண்ண ஆரம்பிக்க அனைவரும் அவள் செய்கையில் சிரிக்க அந்த இடைவெளியில் தன்னவளுக்கான முத்தத்தை காற்றில் பரிசளித்தான்.சட்டென அவனின் செய்கையில் முகம் மலர்ந்தவள் அவன் பையை வாங்கி கொண்டாள்.
“நீயும் ப்ரெஷ் ஆய்ட்டு வா அபி சேர்ந்து சாப்டலாம்”,என சாரதா அவனிடம் கூற டூ மினிட்ஸ் வந்துரேன்ம்மா என்றவாறு தங்களறைக்குச் சென்றான்..
அவனுக்காய் ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் எடுத்துச் சென்றவள் அவனைத் தேட பின்னிருந்து அணைத்தவன் மிஸ் யூ டி பொண்டாட்டி..என்ன சர்ப்ரைஸ் அந்த குரங்கு வீட்டுக்கெல்லாம் வந்துருக்கு..
“இல்லங்க லீவ்னு சொன்னாங்க நா தான் பாப்பாவையும் கூட்டிட்டு வாங்களேன்னு சொன்னேன்..”
“போச்சு இது வர ஒருதடவை கூட நா அவளை வீட்டுக்கு கூப்டதேயில்ல என்னை கொல்ல போறா..”
“பரவால்ல நீங்க பயப்படுற ஒரே ஆள் அவங்க தான் போலயே..”,என்றவள் சிரிக்க,
“பயமெல்லாம் இல்ல கொஞ்சம் அட்வைஸ் பண்ணியே கொல்லுவா அதை தான் தாங்கிக்க முடியாது..”,என்று நகர நினைத்தவன் அவளருகில் வந்து..
“நீ என்னை மிஸ் பண்ணவேயில்ல போலயே..ஜாலியா இருந்துருக்க அப்படிதான?”
“ஏன் இப்படி சொல்றீங்க?”
“பின்ன நா வந்தவுடனே மிஸ் யூ சொன்னேன் ரிப்ளையே இல்லையே”,என கன்னத்தை காட்ட சிரித்தவாறே இதழ் மதித்து நகர்ந்தாள்.