கோவை கலக்ட்ரேட் அலுவலகம்..
வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்பட்டது கோவை கலக்ட்ரேட்..
செக்யூரிட்டிகள் முதல் கலெக்டரின் பி ஏ வரை அனைவரும் அன்று கரெக்ட் டைமிற்கு ஆஜாராகி இருந்தனர்..
அனைவருக்குள்ளும் ஒரு வித தடுமாற்றம்.. எப்படி அன்று நடந்துகொள்வதென்று..
துரிதாமாக அனைத்தையும் அரேன்ஜ் செய்து கொண்டிருந்தவர்களின் வேகம் கமிஷ்னர் வந்ததும் இரண்டு மடங்கு வேகமெடுத்தது..
கமிஷ்னர் வீரபாண்டியனைக் கண்டதும் கலெக்ட்டரின் பி ஏ வாணி அவர் அருகில் வந்து, “குட் மார்னிங் சார்..”, என்றாள்..
விறைப்பாக பதிலுக்கு தானும் ஒரு வணக்கத்தை சம்பிரதாயமாக சொன்னவர், “கலெக்ட்டர் வீட்டில் இருந்து கிளம்பியாச்சா..??”, என்று கேட்டார்..
“கிளம்பியாச்சு சார்.. அனேகமா இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இங்கு வந்துவிடுவார்கள்..”, என்றவள், “சார் போக்கே..??”, என்று இழுத்தாள்..
“நானே கொடுக்கறேன் அவங்களுக்கு..”, என்றவர், “அவங்க கார் உள்ளே வந்த பிறகு என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்..”, என்றார்..
“சரி சார்..”, என்று தலையசைதவள், “கலெக்ட்டரோட முதல் மீட்டிங் உங்களோட தான் சார்.. இன்பார்ம் பண்ண சொன்னாங்க உங்ககிட்ட..”
“எத்தனை மணிக்கு..??”
“டென் பார்டி பைவ்க்கு..”
“நல்லது.. நான் பார்த்துக்கறேன்..”, என்றவர் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ஒரு அதிகாரியை அழைத்து பேசத்துவங்கினார்..
வாணி சொன்னது போல் பத்தாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்தது சைரன் வைத்த கார் ஒன்று..
காரைப் பார்த்ததும் போக்கேவை வீரபாண்டியனிடம் கொடுத்துவிட்டு அவரின் அருகில் கலெக்ட்டரை வெல்கம் செய்ய தயாராக இருந்தாள் வாணி..
கார் வந்து நின்றதும் அதிலிருந்து கம்பீரமாக இறங்கியவரைக் கண்டு முதலில் திகைத்த வீரபாண்டியன் தன்னை நிதானித்துக்கொண்டு பொக்கேவை கலெக்ட்டரிடம் நீட்டி, “வெல்கம் டூ கோவை மிஸ் செந்தாரிகை..”, என்றார் கம்பீரமாக..
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}