அவள் அதிர்ந்து போனாள்.
‘மகேந்திரன் தன் தம்பியைக் கொன்னான்னு சொல்வாங்களா?’
அவன் தன் தம்பி மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் போலீசில் அதை நம்பவில்லை என்றால்.
அவனைக் கைது செய்துவிட்டால்? அதை யுகாவின் ஆத்மா கூட விரும்பாது.
அதற்காக யுகா தற்கொலை செய்துகொண்டான் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
அவள் தனக்குள் பேசி முடிவெடுப்பதற்குள் அங்கே யுகேந்திரனின் இறுதிப்பயணம் ஆரம்பமானது.
“அத்தை. நீங்க சொல்லுங்க அத்தை. வேண்டாம்னு சொல்லுங்க அத்தை. யுகா தற்கொலை செய்துக்கிறவனா? அவன் அப்படிப்பட்ட கோழை இல்லை அத்தை.”
அவளது குரல் வனிதாமணியின் செவியை எட்டியதா இல்லையா என்றே தெரியவில்லை.
அப்படியே சிலை போன்று அமர்ந்திருந்தார்.
வாய் மட்டும் முணுமுணுத
...
This story is now available on Chillzee KiMo.
...
்று வார்த்தையால் விவரிக்க முடியாது.
“அத்தை.”
கிருஷ்ணவேணி அழுகுரலில் அழைக்க அவர் நிமிரவேயில்லை. தனியுலகத்தில் இருந்தார்.
சாருமதி அவள் தோளைத் தொட்டாள்.
“கிருஷ்ணா. யுகா உனக்கு மிகப்பெரிய கடமையைக் கொடுத்துட்டுப் போயிருக்கான். நீதான் இந்த வீட்டை பழைய படி மாத்தனும்.”