அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அவள் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
சாருலதா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள்.
கிருஷ்ணவேணி வனிதாமணியோடவே முடங்கிவிட்டதால் அவள்தான் வீட்டு வேலைக்காரர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
தனது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு இன்னமும் தன் தம்பியின் மறைவு அதிர்ச்சியானதாகத்தான் இருந்தது.
அவனை விளையாட்டுப்பிள்ளையாகத்தான் அவன் எண்ணியிருந்தான். அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டுப்போவான் என்று அவனால் நம்பக்கூட முடியவில்லை.
ஏன் அப்படிச் செய்தான்?
அன்று பார்க்கும்போது கூட தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவன் மாதிரியே தெரியவில்லை. என்னவோ தூங்குவது போன்றேதான
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு நல்ல பதிலை சொல்லியிருந்தா அவன் ஏன் இந்த மாதிரி தவறான முடிவை எடுக்கப் போறான்? அவன்தான் அவ அந்த வீட்டுக்கு வர காரணமானவன். அவனே இப்ப இல்லைங்கிறப்ப, அவ எதுக்கு இன்னும் இங்க இருக்கனும்?”
“அம்மா. பேசாம இரும்மா. அவளை யுகா அழைச்சுட்டு வந்திருக்கான். அவளை எப்படி மத்தவங்க அனுப்ப முடியும்?”