“பரவால கண்ணா.. நானும் தான் காலையிலயே உன்கிட்ட புலம்பியிருக்க கூடாது.. “
“சரி விடுங்க.. இனிமேல அப்படி நடந்துக்க மாட்டேன்.. அப்புறம் என்ன மா விஷேஷம்.. உங்க முகம் டாலடிக்குது. எனிதிங்க் ஷ்பெஷல்?? ... ” என்று தன் அன்னையின் புன்னகைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமானான்..
“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா.. “ என்று சிரித்தார்..
“ஹ்ம்ம் எனக்கு தெரியுமே!!! உங்க ப்ரெண்ட் ஐ பார்த்ததனால தான இந்த சிரிப்பு உங்க முகத்துல... சுசிலாம்மாவை பார்த்தீங்களா.. எல்லாம் செக் பண்ணாங்களா?? “ என்று அக்கறையாக விசாரித்தான்..
சுசிலா என்றதும் ஜானகியின் திட்டம் நினைவு வந்தது..
“எப்படி ஆதியிடம் பேச்சை ஆரம்பிப்பது??? “ என்று யோசித்தார்..
“என்னமா யோசிக்கிறீங்க ??? “
“ஆங்.... ஆதி என்ன கேட்ட??
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் அசாதரணமாக தாங்கி ஜெயிச்சுட்டானே என் பையன்... ஆனால் இவ்ளோ பெரிய ஆண்மகன், மனசுல எதையோ நினைச்சு கிட்டு இப்படி தூக்கம் வராமல் கஷ்ட படறானே..
அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருந்தால் இப்படி கவலை பட மாட்டானோ?? .. எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாகினார் ஜானகி..