ஆனால் எப்படி ஆதி கிட்ட அந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தான் மனம் மீண்டும் அதே யோசனையை தொடர்ந்தது..
மெல்ல கண் விழித்த ஆதி தன் அன்னையின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகையை கண்டு,
“அம்மா.. எங்கிடட்ட எதுவும் கேட்கனுமா??? நானும் வந்ததில் இருந்து பார்த்துட்டே இருக்கேன்.. ஏதோ கேட்கணும்னு நினைக்கிறீங்க?? ஆனால் யோசிச்சுட்டே இருக்கீங்க.. எதுனாலும் தயங்காமல் கேளுங்க” என்று ஊக்க படுத்தினான்.
“அது வந்து ஆதி... நீ இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போற??? பாரு உனக்குனு ஒரு குடும்பம், ஒரு குழந்தைனு இருந்தால் வாழ்க்கை போரடிக்காமல் இருக்கும். இல்லைனா இப்ப இருக்கிற இந்த வாழ்க்கையில் சீக்கிரம் உனக்கு சலிப்பு வந்திடும்.. அப்ப உனக்குனு யார் இருப்பா ?? “ என்று மெல்ல ஆரம்பித்தார்..
அதை கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுசிலாம்மாவது சொல்லி இருக்கலாம்”
“குழந்தையை சுமக்க போற பொண்ணு மோஷமா இருந்தா??? அதே குணம்தான் அந்த குழந்தைக்கும் வரும்..அதோடு நம்ம வசதியை தெரிந்து கொண்டு குழந்தைய வச்சு நம்ம வீட்டுக்குள்ள வர முயற்சி செய்வா.. இந்த பொண்ணுங்களை பற்றி தெரியாதா?? தேவை இல்லாமல் மறுபடியும் பிரச்சனைதான் வரும் “