“நாம் நல்ல பொண்ணா கண்டு பிடிக்கலாம் ஆதி.. அதோடு நிறைய சட்டம் எல்லாம் இருக்காம். முன்னாடியே நாம் எல்லாம் ஒப்பந்தத்துல எழுதிடலாம்..” என்று மகனை சமாதான படுத்த முயற்சி செய்தார்
“ம்ஹூம்ம்... நீங்க என்ன சொன்னாலும் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. உங்களுக்கு குழந்தை தான் வேணும்னா ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்.. இந்த மாதிரி வேண்டாம்..”
“இல்லை ஆதி.. எனக்கு என் ராமோட வாரிசு... உன் குழந்தைதான் வேணும். நம்ம சந்ததி உன்னோட நின்னு போயிட கூடாது .. ஒன்னு நீ கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லை எனக்கு ஒரு வாரிசாவது வேணும்.. நீயே முடிவு பண்ணிக்கோ” என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு கோபமாக கூறினார்..
தன் அன்னை இந்த மாதிரி கோப பட்டு பார்த்ததில்லை அவன்.. ஆனாலும் அவன் மனம் இளகாமல்
“இந்த இரண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
மா இதுவரை எதையும் அவனிடத்தில் கேட்டது இல்லை..
“நான் ஏன் இவ்வளவு சுயநலமாக இருக்கேன்?? என்னுடைய பக்கத்தை மட்டுமே பார்த்து அதிலயே பிடிவாதமாக இருக்கேனோ?? ..
அவர் பக்கம் பார்த்தால் அவருடைய ஆசையும் நியாயமானது தான்..” என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது ஜானகியே தொடர்ந்தார்...