(Reading time: 15 - 30 minutes)

“ம்ம் இல்ல..”,என்றவன் தன் சட்டையை செய்கையால் காட்ட அவன் மார்பு பகுதி முழுவதும் கசங்கியிருந்தது.அதை கண்டவளோ லேசாய் நாக்கு கடித்து கண்சிமிட்டி அவனை பாவமாய் பார்த்தாள்.

“திஷா பேபி வேணாம் மீ பாவம்..இப்படியெல்லாம் ரியாக்ஷன் குடுத்தா அப்பறம் நா வேலைக்கு போன மாதிரி தான்.நீ ஹாலுக்கு போ நா டூ மினிட்ஸ்ல வரேன்.அம்மா கேட்டாங்கனா போன் பேசிட்டு இருக்கேன்னு சொல்லு”,என. மார்க்கமாய் சிரித்து வைத்தான்.

ஹாலிற்கு வந்தவளோ முகச் சிவப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள்.அவன் கூறியது போலவே அவள் மட்டும் நிற்பதை கண்டு சாரதா அவனைப் பற்றி கேட்க போன் பேசிக் கொண்டிருப்பதாய் கூறி சமாளித்தாள்.

ஐந்து நிமிடத்தில் வேறு சட்டையோடு வந்தவன் அவள் கொடுத்த உணவுப் பையை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல வாசல் வரை சென்றவள் கதவோரமாய் நின்று கொண்டாள்.கார் கதவை திறந்தவன் என்ன நினைத்தானோ அவளருகில் வந்து ரகசியமாய்,

“அந்த சட்டையை எதுவும் பண்ணிடாத அப்படியே இருக்கட்டும் ரொம்ப ஸ்பெஷல் புரியுதா!”,எனக் கூறி மேலும் சிவக்க வைத்துச் சென்றான்.

அவன் கிளம்பும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்தவள் தங்களறைக்கு வந்து முதல் வேலையாய் அவனின் சட்டையை தன் கையில் எடுத்தாள்.கசங்கிய பகுதியை மீண்டும் மீண்டும் வருட அத்தனை இதமான மயிலறகாய் அவள் மனம் அசைந்தது.மெதுவாய் எழுந்து கண்ணாடி அருகில் சென்றவள் சட்டையை தன் மேல் போட்டுக் கொள்ள அதிலிருந்த பெர்ப்யூமின் வாசமும் தன்னவனின் வாசமும் சேர்ந்து அவளை ஏதோ மோன நிலைக்கு தள்ள அப்படியே தலை சாய்த்து அதன் இனிமையை உள் வாங்கினாள்.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ சட்டென கேட்ட போனின் ஒலியில் நினைவிற்கு வந்தவள் அதை கையிலெடுக்க அவளின் மாயவன் தான் அழைத்திருந்தான்.

“ஹலோ என்னாச்சு எதாவது விட்டு போய்டீங்களா?”

“ம்ம் பேபி என் மனசை தான் விட்டு வந்துட்டேன்..பத்திரமா பாத்துக்குறியா?”,என பொறுமையாய் கேட்க அவளோ முகம் வெம்மையுற அமைதி காத்தாள்.

“ஆனாலும் நீ அநியாயம் பண்ற 15 நாள் லீவ் போட்டு உன்னையே சுத்தி வந்தப்போ எல்லாம் கண்டுக்காம இப்படி ஆபீஸ் போறவன போட்டு டார்ச்சர் பண்ற டீ..பேசாம கிளம்பி வீட்டுக்கு வந்துரவா?”

“ஹும் அதெல்லாம் வேணாம்..”,என அவசரமாய் அவள் கூற மறுபுறம் அவன் சத்தமாகவே சிரித்தான்.

“ஹே பொண்டாட்டி என்ன பண்ணிட்டு இருக்க சட்டையை கையில வச்சு கனவு கண்டுகிட்டு தான இருக்க..”

“இல்ல போட்டு பாத்து கனவு காணுறேன்..”,என ஏதோ ஒரு நியாபகத்தில் அவள் உளற அபினவோ மறுபுறம் குத்தித்து ஆர்பாட்டம் பண்ணாத குறைதான்.

“ஐயோ இல்ல அது வந்து..நா..”

“ம்ம் போதும் டீ பொண்டாட்டி..எனி டைம் வீட்டுக்கு வந்துருவேன்..என் தொல்லையை அனுபவிக்க தயாரா இரு திஷா டியர்..பை”,என்றவன்  அதே உற்சாகத்தோடு தன் இருக்கையில் அமர்ந்து வேலையை ஆரம்பித்தான்.

திஷானிக்கோ எப்போது அவன் வரும் நேரம் ஆகுமென வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.மாலை நேரமாக வேக வேகமாய் முகத்தை கழுவி தன்னை சரி செய்தவள் சாரதா கொடுத்த பூவை வாங்கி சூடிக் கொண்டாள்.

இரண்டு மணி நேரம் கடந்திருந்த நிலையில் சற்றே பொறுமையிழந்தவளாய் வாசலையும் டீவியையும் மாறி மாறி பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.அவன் வழக்கமாய் வரும் நேரமும் கடந்து போக சாரதா அவளை சாப்பிட அழைத்தார்.

“திஷானி அவனுக்கு எதாவது வேலை வந்துருக்கும் பாதி நாள் இப்படிதான் பண்ணுவான்.ஒரு போன் கூட பண்ணி சொல்ல மாட்டான்..என்ன ஐடியோ  போங்க..நீ வா சாப்டலாம்..”

“இல்ல அத்தை நா அப்பறமே சாப்டுறேன்..நீங்களும் மாமாவும் சாப்டுங்க..எனக்கு பசிக்கல..”,என்றவள் தங்களறைக்குச் சென்றாள்.அப்போது தான் நினைவு வந்தவளாய் தன் மொபைலைப் பார்க்க 15 குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

தாமதமாகுமெனவும் எதிர்பாராத வேலையெனவும் மேலும் அவ்வப்போது அனுப்பியிருப்பான் போலும்..அவன் நிலைமை மூளைக்கு புரிந்தாலும் ஏனோ மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்தது.ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே படுத்துவிட்டவள் ஏதோ சிந்தனையில் தன்னை தொலைத்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அறைக் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டும் வந்தது கணவனென அறிந்திருந்தும் அசையாமல் அவள் படுத்திருக்க வந்தவனோ மெதுவாய் அவள் பின்புறம் படுத்துக் கொண்டு கன்னத்தில் இதழ் பதித்தான்.

“திஷா பேபி செம கோவத்துல இருக்கியா?”

“……..”

“நா அவ்ளோ வேலைலேயும் உனக்கு எத்தனை மெசெஜ் பண்ணேன்..ஒரு ரிப்ளையாவது பண்ணியா நீ..நியாயமா நா தான் கோபப்படனும்..”,அவன் முடிப்பதற்குள் கையை தட்டிவிட்டவள்  காரமாய் அவன்புறம் திரும்பி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.