அருணுக்கு அவள் இன்னமும் அந்த வீட்டில் இருப்பதில் சம்மதமில்லை.
ஆனால் அவள் நடந்ததை கூறியபிறகு கதிரவன் புரிந்துகொண்டார்.
அதனால் தனது மகனையும் பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டார்.
கிருஷ்ணவேணி அந்தக் குடும்பத்தின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்ததால் அவரால் நீ கிளம்பி வா என்று அவளிடம் சொல்ல முடியவில்லை.
அவருமே யுகேந்திரன் இறந்த செய்தியறிந்து அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் இப்போதைய நிலைமையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவரிடம் தனியாகப் பேசும்போது யுகேந்திரன் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டான் என்ற தனது சந்தேகத்தை அவரிடமும் சொன்னாள்.
“நீ எப்படிம்மா அத்தனை நிச்சயமாய் சொல்கிறாய்?”
அவரிடம் அன்று ஒருநாள் தற்கொலை செய்துகொள்வதைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நிமிர்ந்தே பாராமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
அதன் பிறகு அவளும் வேண்டாவெறுப்பாய் சாப்பிட்டு முடித்துவிட்டு சமையல் அறையை ஒதுங்க வைத்து சுத்தம் செய்துவிட்டு தனது அறைக்கு வந்தாள்.
மகேந்திரன் அறை மூடியிருந்தது.
இது என்னடா வாழ்க்கை?
அவளுக்க அலுப்பாயிருந்தது.