மகேந்திரனுக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. தம்பியே போன பிறகு அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று விட்டுவிட்டான்.
ஆனால் சாருலதாவுக்கோ, அவளது தந்தைக்கோ ஏதாவது அவன் எழுதியது கிடைக்காதா? என்ற எண்ணம். எதிலாவது அவள் மறுத்ததினால்தான் அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று குற்றம் சாட்ட ஏதுவாக ஏதாவது கிடைக்கிறதா? என்று அவனது மரணத்தில் ஆதாயம் தேட முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் கிடைக்கவில்லை.
அப்படியும் அவர்கள் சும்மா இருந்துவிடவில்லை.
அவள் மறுப்பு சொன்னதால்தான் யுகேந்திரன் இந்த முடிவிற்கு வந்ததாக மகேந்திரனை நம்ப வைக்க முயன்றார்கள்.
முன்பே மகேந்திரனை வளைத்துப்போட முயன்றவர்கள், இப்போது அத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசான மகேந்திரனை அத்தனை எளிதாக
...
This story is now available on Chillzee KiMo.
...
னை அங்கே எதிர்பார்த்திராத அவள் திடுக்கிட்டாள்.
பதட்டத்துடன் அவனைப் பார்த்தாள்.
“சுத்தம் செய்யலாம்னு வந்தேன்.”
“சுத்தம் செய்திட்டியா?”
அவள் தலையாட்டினாள்.
“சரி. வந்து சாப்பாடு எடுத்து வை.”
இத்தனை நாட்களில் அவன் இன்றுதான் அவளிடம் பேசியிருக்கிறான்.