வீட்டில் இருப்பதோ இருவர்தான். அவர்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
அவளுக்கு இப்போதெல்லாம் அவனுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? தான் ஏன் இன்னும் இங்கிருக்கிறோம்? என்ற சந்தேகம் எழும்.
ஒருவேளை தன் கையைப் பற்றி அவனிடம் வனிதாமணி கொடுத்ததால்தான் அவள் கிளம்பும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாளா?
அவனும் தன் அன்னைக்காகத்தான் அவளைப் பொறுத்துப்போகிறான் என்று அவளுக்குத் தெள்ளத்தெளிவாக புரிந்தது.
எப்போது அத்தை குணமாகி வருவார். தான் அந்த வீட்டை விட்டு வெளியேறுவோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
படுக்கையில் வந்து படுத்தவளுக்கு உறக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அதன் பிறகு எப்போது உறக்கம் வந்தது என்றே தெரியவில்லை.
இப்போதெல்லாம் அவள் நேரம் கழித்து உறங்குவதால் காலையில் தாமதம
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ளவர்கள் அவனது இழப்பிலிருந்து மீண்டு வரவில்லை.
சோகமாக மீண்டும் அவனது அறைக்கு வந்தாள்.
எல்லாமே சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அவன் இறந்த பிறகு சாவிற்கு காரணம் என்று ஏதாவது எழுதி வைத்திருக்கிறானா? என்று சல்லடை போட்டு சலித்தெடுக்காத குறையாக தேடி எடுத்துவிட்டார்கள்.