அவன் வரும் நேரம் அறிந்து அவள் தயாராய் இருபபாள். அவன் உள்ளே வந்ததும் குளிக்கப் போய் விடுவான்.
அவள் அவன் பின்னேயே வந்தாள்.
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கும்போது அவளையும் தன் கூடவே சாப்பிடச்சொன்னான்.
அவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தவாறே மறுப்பு சொல்லாமல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அன்று இரவும் அவளுக்கு உறக்கம் வரவில்லை.
மகேந்திரன் சாதாரணமாக அவளிடம் பேசி விட்டது, அத்துடன் அவளுக்கு யுகேந்திரனின் டைரி கிடைத்தது எல்லாமாக சேர்ந்து அவளுக்க உறக்கமே வரவில்லை.
அந்த டைரியில் தனக்கு ஏதோ செய்தி இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
ஆனால் அவளுக்கு சுருக்கெழுத்து தெரியாது. ஒரு முடிவுடன் படுத்தாள்.
மறுநாள் காலை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11591-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-16">Episode # 16
{kunena_discuss:1182}