(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 13 - ஸ்ரீ

anbin Azhage

 என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்

பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்ததன்

பேர் என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதலென உயிரும் சொன்னதன்பே

காதலென உயிரும் சொன்னதன்பே

 

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த

பேர் என்னவென கேட்டேன்

என் தீவில் ஒரு கால் வந்ததந்த

ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன் இடத்தில் உருகி நின்றது

காதலென உயிரும் சொன்னதன்பே

காதலென உயிரும் சொன்னதன்பே

ழகிய கவிதைகளாய் நாட்கள் நகர்ந்தது கொண்டிருந்தது.அப்படி ஒரு நாளில் தான் திஷானியின் பிறந்தநாள் வந்தது.தன்னுடனான முதல் பிறந்தநாள் அந்த ஒரு காரணமே அபினவை பலவித ஆச்சரியங்களை அவளுக்கு அளிக்கத் தூண்டியது.

அவனுக்கு ஏற்றவாறு அவள் பிறந்தநாளின் முந்தைய நாள் அபினவின் நண்பன் ஒரு கெட்டுகெதருக்காக அவனை அழைத்திருந்தான்.திஷானிக்கு தெரியாமல் சாரதா ராகவனோடு சேர்ந்து தன் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை முடித்துவிட்டு அவளோடு மாலை ஆறு மணியளவில் கிளம்பினான்.

அழகிய பேபி பிங்க் நிற டிசைனர் புடவையில் அவள் அம்சமாய் தயாராக அபினவிற்கோ அவளிடமிருந்து விழியகற்றவே தோன்றவில்லை.

“திஷா டியர் வர வர நீ செமயாய்டே போறியே..அழகு டீ..”

“அபிப்பா போதும் ரோட்டை பார்த்து ஓட்டுங்க..”,என்றவளின் குரல் காற்றில் கலந்து கரைந்துதான் ஒலித்தது.

அடுத்த மூன்று மணி நேரமும் அத்தனை இனிமையாய் கழிந்தது திஷானிக்கு.பத்து மணியளவில் அங்கிருந்து கிளம்பியவன் நேராய் வீட்டிற்குச் செல்லாமல் காரை வேறுபுறம் திருப்ப கேள்வியாய் அவனை நோக்கினாள்.

“பொண்டாட்டி நா இன்னைக்கு சுத்தமா சரியே இல்ல..நீ வேற இவ்ளோ நேரம் என்னை உரசிக்கிட்டே உக்காந்துட்டு இருந்தியா..அத்தான் ரொம்ப பாவம் தான..”,என பாவமாய் வினவ பெண்ணவளோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அமர்ந்திருந்தாள்.

“அதனால தான் ப்ளீஸ் கொஞ்ச நேரம் பீச் மணல்ல உக்காந்துட்டு போலாம் ஓ.கே வா?”

“ம்ம் “என முனகி வைத்தவளுக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை.அபினவ் கூறியதில் பாதி உண்மைதான் எனினும் முக்ககிய காரணம் இப்போதே வீட்டிற்குச் சென்றால் அவளுக்கான சர்ப்ரைஸ் சொதப்பிவிடும் என்ற காரணத்தால் தான்.

கடற்கரைக்குச் சென்றவன் அவளையும் அமர வைத்து வேண்டுமென்றே அவளை இடித்தவாறே அமர்ந்தான்.

ஒரு மணி நேரம் கடற்கரை காற்றின் இதத்தில் வழக்கம்போல் ஏதேதோ பேசி கேட்டு முகம் சிவக்க வைத்து காதல் கொள்ள வைத்து இருவரும் ஒருவர் மேல் ஒருவர் தங்களின் காதலை அளவில்லாமல் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதன்பின் மணியை பார்த்து இப்போது கிளம்பினால் சரியாய் இருக்கும் என முடிவு செய்தவன் தன்னவளை அழைத்துச் சென்றான்.

வீட்டுவாசலில் காரை நிறுத்தியவன் அவள் இறங்கியவுடன்,

“திஷா டியர் நீ போய் கதவை திற நா ஒழுங்கா பார்க் பண்ணிட்டு வரேன்.லேட் ஆச்சுல அப்பா அம்மா தூங்கிருப்பாங்க..”,என்று கூற மெதுவாய் சென்று கதவைத் திறந்தாள்.

கதவின் அழுத்தத்தில் மேலிருந்த பலூனிலிருந்து பூக்கள் அவள் தலையை நிரப்பியிருந்தது.எதிர்பாரா இந்த தாக்குதலை கண்டு முதலில் அதிர்ந்தவள் பூக்களின் நடுவில் நிற்பதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க அவள் பின்னிருந்து தோள் பற்றியவன் “ஹேப்பி பர்த்டே மை கருப்பழகி..”என்றவாறு அவளருகில் வந்து நின்றான்.

கண்களில் கண்ணீர் குளமாய் தேங்க ஆரம்பித்திருந்தது திஷானிக்கு.பிறந்ததே வேஸ்ட் என நினைத்திருந்தவளின் பிறந்தநாளை விழாவாய் கொண்டாடும் கணவன்.பேசக் கூட தோன்றாமல் அவள் கணவனையே பார்த்திருக்க மெதுவாய் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்

சாரதாவும் ராகவனும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஹாலின் நடுவில் போடப்பட்டிருந்த டேபிளில் அவளின் திருமண புகைப்படம் தாங்கிய போட்டோ கேக் அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் ப்ளேவரில் கண்முன் காட்சியளித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.