மொபைலைத் தூக்கி கட்டிலில் போட்டவள்,”ச்ச பாவம் பச்ச குழந்தையை விளையாட்டுக்காகவே இருந்தாலும் இப்படியா மிரட்றது நானெல்லாம் என் பாப்பாவ இப்படி பேச்சுக்கு கூட பண்ண மாட்டேன்ப்பா”,என யோசித்தவளுக்கு சட்டென சாரதாவின் கேள்வி மண்டைக்குள் ஆணி அடித்தாற் போன்று வந்து விழுந்தது.
கைகள் அவளறியாமல் தன் வயிற்றை வருட ஒரு நொடி சந்தோஷம் பயம் பேரானந்தம் அனைத்தையும் கடந்த தாய்மை உணர்வும் போட்டி போட கண்களில் நீர் கோர்த்திருந்தது.
“எனக்கு குழந்தையா..என்னையே பாறமா நினைச்ச இந்த உலகத்துக்கு என் மூலமா ஒரு உயிர் வரப் போகுதா..அது என்னை அம்மானு கூப்பிடும் என் அபினவை அப்பா அப்பானு சுத்தி வரும்.இதை அவன்கிட்ட சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவான்.என்னை தூக்கி சுத்துவானா என் முகம் மொத்தமும் முத்தத்தால் நனைப்பானா..என் பிள்ளையை இப்போவே பாக்கணும்டீனு குழந்தையாய் கெஞ்சுவானா..என்ன செய்வான் அவன்..”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
நினைக்க நினைக்க நெஞ்செல்லாம்அடைத்துக் கொண்டு எழுகிறது ஒருவித பரவசம்.அடுத்த நொடி அவனை அழைக்க வேண்டும் என்றெண்ணியவள் கட்டிலில் தூரமாய் கிடந்த போனை நோக்கிப் பாய அப்போது தான் கவனம் சென்றது தன் கால் மீது.மொத்த சந்தோஷமும் போன இடம் தெரியாமல் போக அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“இதையெப்படி மறந்தேன்..என் குழந்தை என் ரத்தம் அதுவும் என் போலவே இருந்துட்டா..!!!அவனோ அவளோ என் போலவே இந்த உலகத்தின் சராசரி மக்ககளை போல வாழ முடியாம போய்ட்டா..இல்ல அது நடக்க கூடாது நடக்கவே கூடாது அப்பறம் அவருக்குதான் வாழ்க்கை முழுசுக்கும் கஷ்டம்.இல்ல இதை நா நடக்க விடவே மாட்டேன்.அவருக்கு இந்த விஷயம் தெரியகூடாது.இந்த குழந்தை எனக்கு வேண்டாம்.எனக்கு என் அபினவ் போதும்..”,என எண்ண எண்ண தலையை பிளந்துவிடும் ஒருவித வலி அவளை அதற்குமேல் யோசிக்கவிடாமல் அப்படியே மயங்கச் செய்ந்திருந்தது.
தொடரும்...
{kunena_discuss:1198}