தொடர்கதை - அன்பின் அழகே - 12 - ஸ்ரீ
“விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே”
சாரதா கூறியது போலவே மறுநாள் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.பள்ளியிலிருந்து வந்தவள் உடைமாற்றி தயாராகி வர அவர் வாங்கி வைத்ததையெல்லாம் பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்து சமையலறைக்குச் சென்று கப்போர்டில் போட்டு வைத்திருந்த பெரிய பாட்டில்கள் நான்கை எடுத்து வந்தாள்.
“அத்தை இது நா நெட்ல பாத்தேன்..ரொம்ப க்யூட்டா இருக்கும்..பட் இதுவரை செஞ்சு பாத்தது இல்ல..”,என்றவள் தன் கைப்பேசியில் அந்த படத்தை காட்ட சாரதாவுக்குமே உற்சாகம் ஒட்டிக் கொண்டது.
“ரொம்ப நல்லாயிருக்கு டா திஷானி..மொபைல் இருந்தா உலகமே நம்ம கையில தான் போல..சரி நா என்ன ஹெல்ப் பண்ணணும்னு சொல்லு செய்யலாம்..”,
“ம்ம் உண்மைதான் மொபைல்னால எத்தனையோ கெட்ட விஷயம் நடந்தாலும் நல்ல விஷயங்கள் அதை விட அதிகமாவே இருக்கு..நா இதை கட் பண்ணி தரேன் நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி பெயிண்ட் பண்ணுங்க அத்தை..”
மெதுவாய் பாட்டில்களின் அடிப் பாகத்தை கத்தரித்தவள் அதன் ஓரங்களை மழுங்கச் செய்து சாரதாவிடம் கொடுக்க அவர் அதற்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்க ஆரம்பித்திருந்தார்.
அழகிய பச்சை வண்ணத்தில் அதை அலங்கரித்து நடுவே சிவப்பும் வெள்ளையுமாய் சிறு சிறு பூக்கள் போன்று வரைந்தார்.
அதற்குள் திஷானி அந்த பாட்டிலில் காம்பு போன்றும்இலை போன்றும் வெட்டி எடுத்து அதை ஒட்ட வைத்து அதை ஒரு மூடியின் மேல் ஒட்ட வைத்தாள்.
அனைத்தையும் முடித்து அதை பார்த்தவர்களுக்கு திருப்தியாய் இருக்க சாரதாவிற்கோ உற்சாகம் தாளவில்லை.
“பாரு இதுக்குதான் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும்ங்கிறது..குட்டியா எத்தனை அழகாயிருக்கு..இன்னும் உனக்கு என்ன தேவையோ சொல்லு திஷானி..நா வாங்கிட்டு வரேன் வீட்டையே மாத்திரலாம்..”என செய்ததில் ஒன்றை எடுத்துக் கொண்டு ராகவனிடம் காட்டுவதற்காகச் சென்றார்.
அனைத்தையும் க்ளீன் செய்துவிட்டு தங்களறைக்கு வந்தவள் அபினவிடம் இதை எப்படி காட்டலாம் என்ற சிந்தனையில் இருந்தாள்.சட்டென நினைவு வந்தவளாய் தன் பேக்கிலிருந்து அந்த மிட்டாய்களை எடுத்து அந்த பாக்ஸிற்குள் எடுத்து வைத்தாள்.
சற்று நேரத்தில் வந்தவன் ஹாலில் யாரையும் காணாமல் தங்களறைக்கு வந்தான்.
“ஓய் திஷா டியர் என்ன கதவை கூட லாக் பண்ணாம மாமியாரும் மருமகளும் என்ன பண்றீங்க உள்ளே!திருடன் வந்தா கஷ்டமே பட வேண்டாம் போலயே?!”
“இவ்ளோ நேரம் அங்க தான்ங்க இருந்தோம் இப்போ தான் உள்ளே வந்தோம்.இன்னைக்கு ஆபீஸ் எப்படிபோச்சு?”,என்றவாறு பையை வாங்கிக் கொண்டாள்.
“நத்திங் ஸ்பெஷல்டா வழக்கம் போல போர் தான்..சரி உனக்கு எப்படியிருந்தது.அம்மா என்னவெல்லாமோ வாங்க போறேன்னு சொன்னாங்களே காலைலேயே..என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்..”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“ம்ம் சூப்பரா போச்சு..சுகர் ப்ரீ கேண்டி சாப்டுறீங்களா?”
“நா என்ன கேட்டேன் நீ மிட்டாய் சாப்டுறியானு கேக்குற..சரி குடு சாப்டுவோம்..”
தன் பையிலிருந்து அந்த பாக்ஸை எடுத்து அவனிடம் திறந்து நீட்ட பார்த்தவனின் விழிகளில் வெகுவாய் பாராட்டு இருந்தது.
“வாவ் செம க்யூட்டா இருக்கு திஷா பேபி..இவ்ளோ க்ரியேட்டிவான ஆளா நீ..ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு..அம்மா என்ன சொன்னாங்க?”
“அத்தையும் நானும் சேர்ந்து தான் பண்ணிணோம் இதை..அவங்க அதை பாத்துட்டு சின்ன குழந்தைமாதிரி எக்ஸைட் ஆனாங்க..அவங்களும் வீட்ல கம்பனிக்கு ஆள் இல்லாம ரொம்பவே பீல் பண்ணிருப்பாங்கனு நினைக்குறேன்..”
“ம்ம் உண்மை தான் நானும் அப்பாவும் வீட்ல இருக்குற நேரமே கம்மி தான்.அவங்க தனியா எவ்ளோ தான் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க..பட் முன்னாடியெல்லாம் ஸ்வெட்டர் வால் ஹேங்கிங்ஸ் எல்லாம் பண்ணுவாங்க..ஆனா இந்த மாதிரி ரீசைக்கிலிங் க்ரஃவ்ட் அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துருக்கும்..”