“ஏய் ஊமை கொட்டான் என்ன காலங்காத்தாலேயே செம காரமா இருக்க!!என்னையே திட்டுற சரியில்லயே..பயம் விட்டு போச்சா??”
“ம்ம் உங்க மேல பயம் இருந்ததுனு நா எப்போவாவது சொல்லிருக்கேனா?நீங்களா அப்படி நினைச்சுகிட்டா நா என்ன பண்ண முடியும்?”
“ஓ..அவ்ளோ ஆய்டுச்சா..ம்ம் பாத்துக்குறேன்..”என்றவன் குளித்து தயாராகச் சென்றான்.
கூறிய நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு ட்ரைவிங் ஸ்கூலிற்குச் செல்ல இவர்களுக்காக அபினவின் நண்பன் காத்திருந்தான்.
அபினவ் அங்கேயே அலுவலக அறையில் காத்திருப்பதாய் கூற அவனை முறைத்தவாறே திஷானி அவன் நண்பணோடு சென்றாள்.
ஒரு மணி நேர பயிற்சி முடிந்து வந்தவளின் முகத்தில் அப்படியாய் ஒரு கடுப்பு.ஒன்றுமே பேசாமல் வந்து அவனருகில் அமர்ந்தாள்.
“நல்லாவே பிக்கப் பண்ணிக்குறாங்க மச்சி..சீக்கிரமா கத்துப்பாங்க கண்டிப்பா..சரி டா நாளைக்கும் இதே நேரத்துக்கு வந்துடுங்க..அடுத்த பேட்ஜ் வந்துட்டாங்க நா போய் பாத்துட்டு வரேன்..”,என கைக்குலுக்கிச் சென்றான்.
“ஓய் அதான் நல்லா ட்ரைவ் பண்றியாமே அப்பறம் எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சுருக்க!”
“சொன்னா மட்டும் இவரு அப்படியே காது குடுத்து கேட்ருவாரு..போலாம் ஸ்கூல்க்கு லேட் ஆச்சு”,என்று முனகியவாறே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“ரொம்ப ஓவராதான் போகுது மகளே நைட் கவனிச்சுக்குறேன் உன்னை..”,என்று சத்தமாகவே கூறியபடி அவளை பின் தொடர்ந்தான்.
அன்று முழுவதும் அபினவிற்கு வேலையே ஓடவில்லை.ஏனோ அவளை விருப்பமில்லாத வேலையை செய்யச் சொல்லி வற்புறுதத்துகிறோமோ என யோசித்துக் கொண்டேயிருந்தான்.
ஆனால் அதையும் மீறி அவள் இதை கற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற எண்ணமும் மனதைவிட்டு அகல மறுத்தது.
மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்தவனை ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தவள் ஆச்சரியமாய் பார்த்தாள்.இருந்தும் கண்டும் காணாமல் அங்கிருந்து நகராமல் அமர்ந்திருந்தாள்.இரவு உணவு முடிந்து அறைக்குச் செல்லும் வரையுமே அந்த கண்ணாமூச்சி தொடர அறைக்குள் நுழைந்தவள் படுக்கையை சரி செய்து உறங்கத் தயாரானாள்.
அதுவரையுமே அமைதி காத்தவன் பொறுமையிழந்தவனாய்,”ஏய் கருப்பழகி ரொம்ப தான் பிகு பண்ணிட்டு இருக்க இங்க வா முதல்ல”,என்றவனை காரமாய் பார்த்தவள் மறுக்காமல் பால்கனிக்குச் சென்றாள்.
“ம்ம் அப்பறம் மகாராணி உக்கார சொன்னா தான் உக்காருவீங்களா?”
நாற்காலி இல்லாததை உணர்ந்தவள் உள்ளே எடுப்பதற்காகச் செல்ல,”உன்னை உக்கார தான் சொன்னேன் சேர் எடுத்துப்போட்டு உக்கார சொல்லல..”
அவன் கூறியதின் அர்த்தம் உணர்ந்தவளுக்கு முகம்தானாய் மலர இருந்தும் வீம்பாய் உள்ளே செல்ல திரும்பினாள்.அவள் கைப் பற்றியவன் வேகமாய் தன்புறம் இழுக்க அவன் மடியில் வந்தமர்ந்தாள்.
“மேடம் இதுக்கு முன்னாடி இப்படி உக்காந்ததேயில்லையா!!ரொம்பதான் சீன் போடுறீங்க..”
“ப்ச்ச் நா கோவமா இருக்கேன்..விடுங்க நா போனும்..”
“நா உன்னை பிடிக்கவேயில்லையே பார் யுவர் இன்பர்மேஷன்..”,என்றவன் சிரிப்பை அடக்கியவாறு அவள் காதருகில் ஊதினான்.
அத்தனை கோபமும் சென்ற இடம் தெரியாமல் போயிருக்க மனம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தான் அவளின் மாயவன்.
அவள் முகத்தின் இலகுத்தன்மையை கண்டவன் தன் கைகளை அவளைச் சுற்றி போட்டவாறு,”ஹே பொண்டாட்டி இப்படியே இரு இதான் நல்லாயிருக்கு.நாளையிலயிருந்து ட்ரைவிங் போக வேண்டாம் சரியா?”
“இல்ல இல்ல நா போறேன்..”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இப்படி அழுது வடிஞ்சுட்டு ஓட்டினா கண்டிப்பா இடிச்சுருவ.உனக்கு எப்போ தோணுதோ அப்போ கத்துக்கோ..”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க நேத்து புல்லா கடுப்பா இருந்தது உண்மைதான்.ஆனா இன்னைக்கு அங்க போனவுடனேயே ரொம்ப பிடிச்சுருச்சு.நடக்கவே கஷ்டபடுற என்னை பறக்க வைக்க நினைக்குறீங்கனு புரிஞ்சப்போவே உங்ககிட்ட அதை சொல்லணும்னு நினைச்சேன் தான்.ஆனாலும் சொல்லல..”
“அடிப்பாவி என்னை ஏன்டீ பாடா படுத்தின அப்போ..வர வர உனக்கு ரொம்ப கொழுப்பு ஏறிடுச்சு”,என அவள் இடுப்பில் குறுகுறுப்பு மூட்ட அவளோ நெளிந்தாள்.
“அபிப்பா ப்ளீஸ் ஐயோ சிரிக்க முடில பண்ணாதீங்க..இல்ல சொல்லணும்னு தான் நினைச்சேன்.பட் உங்களோட அப்படி சண்டை போடுறது கொஞ்சம் பிடிச்சது அதான் சொல்லாம முகத்தை கஷ்டப்பட்டு அப்படியே வச்சுருந்தேன்.நா இப்டியெல்லாம் உரிமையா யார்ட்டையும் கோவிச்சுக் கிட்டதே இல்லையா அதான் இந்த அல்ப வேலையெல்லாம் பாத்தேன்..”,என்றவள் அபினவின் கண்களுக்கு நிச்சயம் குழந்தையாய் தெரிந்தாள்.
அவள் பின் தலையை செல்லமாய் தட்டியவன்,”பைத்தியம்..வர வர ஸ்கூல பசங்க கூடசேர்ந்து இப்படி ஆய்டியா நீ..சரியில்லையே..அத்தானோட ரொமான்ஸ் பண்ணி நாளாய்டுச்சோ அதான் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது..உன்னை என்ன பண்றேன்னு பாரு”,என்றவன் தன்னவளை அப்படியே கையில் அள்ளிச் சென்றான் அவளின் அலறலை பொருட்படுத்தாது.
தொடரும்...
{kunena_discuss:1198}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.