(Reading time: 12 - 24 minutes)

எவ்வளவோ முயன்றும் அவளின் கண்ணீர் கன்னம் தொட மூவருமாய் அவளை சமாதானப்படுத்தி ஆட்டம் பாட்டமென அவள் மனநிலையை மாற்றினர்.

திஷானியின் முகம் முழுவதுமாய் அபினவ் கேக்கை பூசிவிட.  அவளோ குழந்தையாய் ஆர்பரித்தாள்.அதன்பின் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் முடிந்து உறங்கச் செல்ல அறைக்குள் நுழைந்தவுடனே திஷானி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“தேங்க் யூ சோ மச்..இப்படி ஒரு பிறந்தநாள் வாழ்க்கைல நினைச்சுகூட பாத்ததில்ல..தேங்க் யூ சோ மச்..”

“திஷா பேபி முதல்ல குளிச்சுட்டு வா உன் ஸ்மெலோட சேர்ந்து இந்த கேக் ஸ்மெலும் என்ன ரொம்ப இம்சை பண்ணுது..போ”,என கண்சிமிட்டியவன் ஒற்றை விரலால் அவள் கன்னத்தில் லேசாய் ஒட்டியிருந்த கேக்கை எடுத்து நாக்கில் வைத்துக் கொண்டான்.

குளியலறைக்குள் சென்றவள் வெகு நிமிடங்கள் கடந்தும் வராமலிருக்க கட்டிலில் அமர்ந்தவன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.கதவு திறக்கும் சத்தம் கேட்டவன் மொபைலில் இருந்து விழியகற்றாமல்,”ஒருபேச்சுக்கு கேக் ஸ்மெல்னு சொன்னா அதுக்காக இவ்ளோ நேரமாவா குளிப்ப”,என்று கேட்க மறுபுறம் பதிலில்லாமல் போகவே தலையை திருப்பி அவளை பார்த்தவன் வாய் பேச மறந்து அப்படியே அமர்ந்திருந்தான்.

அவளுக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கிய திருமண புடவையில் ஈரத்தலையை சென்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டிருக்க முகம் முழுவதுமாய் ஒருவித பதட்டம் வியாபித்திருக்க அப்படியே அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

முதலில் சுய உணர்விற்கு வந்தவன்,”ஓய் என்ன ஸ்பெஷல்..இப்போ இருந்தே பர்த்டே செலெப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டியா..ஏன் அங்கேயே நிக்குற இங்க வா”,என கைநீட்டி அழைத்தான்.

மெதுவாய் அவனருகில் வந்தவள் கட்டிலின் ஓரமாய் அமர அந்த அறையின் ஏசி குளிறையும் மீறிய அவளின் வியர்வையும் அந்த ஆழ் கண்களின் மருட்சியுமே அபினவிற்கு அவளின் மனநிலையை உணர்த்தினாலும் பொறுமையை கடைப்பிடித்தே ஆக வேண்டுமென நினைத்தவனாய் தன் இடத்தை விட்டு அசையாது அவள் கையை மட்டும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“ஓய் டீச்சரம்மா எதுக்கு இப்போ நீ கழுத்து சுளுக்கின மாதிரி குனிஞ்சே உக்காந்துருக்க..”,என கேலியாய் கேட்க அவளோ ஒன்றும் கூறாமல் அவனை ஓரப்பார்வை பார்த்தாள்.

“ம்ஹும் நீ இப்படி நல்லவிதமா சொன்னா பேசமாட்ட போலயே..”,என்றவன் அவளருகில் அமர்ந்து தோளால் இடிக்க சட்டென அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராதவன் ஒரு நொடி திகைத்தாலும் தன்னவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

“ஹேப்பி பர்த்டே திஷா பேபி..”,வார்த்தைகள் கிசுகிசுப்பாய் அவள் காதுகளை வருட அவளின் கரங்களோ தன்னவனின் முதுகில் படர்ந்து மேலும் தன்னோடு இணைத்தது.

“திஷா..நீட் யூ டீ..”மேலும் மேலும் மெல்லியதாய் அவன் குரல் கிறங்கி ஒலிக்க திஷானியோ மொத்தமாய் தன்வசத்தை இழந்திருந்தாள்.

இன்ப அவஸ்தையாய் தன் உணர்வுகளால் போராட அவளவனோ தன் தேடலை அடைந்தே தீரும் வேகத்தை அவளிடம் காட்ட அதே நேரம் அவளை துளியும் ஹர்ட் செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.

ஏனோ சட்டென அவளின் பயம் நினைவிற்கு வர ஒரு நொடி நிதானித்தவன் தன்னவளின் விழி நோக்க அவன் விழியேந்தியிருந்த கேள்வி புரிந்தவளாய் இடவலமாய் தலையசைத்து அவனுள் புதைந்து கொண்டாள்.

அதன் பின்னான நிமிடங்கள் யுகங்களாய் அழகிய அவஸ்தையாய் அன்பின் இருப்பிடமாய் காதலின் கவிதையாய் நகர என்றோ அவன் கூறியது போல் அவனின் முப்பது வருட காதலின் தேடலை தன்னவளிடம் கண்டு கரை சேர்ந்தான்.

அதிகாலையிலே கண்ணயர்ந்தவர்கள் சிறிது நேரத்திலேயே அடித்த அலராத்தில் புரண்டு படுக்க எழப் போனவளை கையணைப்பிற்குள் வைத்து அலராத்தை நிறுத்தியவன்,”தூங்கு டீ பொண்டாட்டி இன்னைக்கு ரெண்டு பேருமே லீவ்”,என மீண்டும் தூக்கத்தை தொர்ந்தான்.

திஷானிக்குமே அத்தனை அசதியோடு எழுந்து கிளம்ப முடியும் என்று தோன்றாமல் போக அப்படியே அவனோடு உறங்கிப் போனாள்.

அதன்பின் அவள் லேசாய் தூக்கம் கலைந்த நேரம் அபினவின் குரல் எங்கோ ஒலிப்பதாய் தோன்ற மெதுவாய் கண்திறக்க முயற்சி செய்தாள்.

“திஷா பேபி சொல்றத கேளு கொஞ்சமா சாப்ட்டு தூங்கு..குட் கேர்ள் தான”,என்றவன் அவள் தலைகோதிக் கொண்டிருக்க மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் அருகிலிருந்த தட்டை பார்த்துவிட்டு,

“என்னப்பா காலையிலேயே சாப்பாடு செஞ்சுருக்காங்க ஏன் டிபன் செய்யலையா??”

“அதுசரி தான் மணி என்ன தெரியுமா மதியானம் ஒரு மணி டீ “

என்னது!!!!!அவசரமாய் மொபைலைத் தேடி மணி பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டாள்.ஐயோ என்ன பண்ணித் தொலச்சுருக்கேன்..கடவுளே!!!என முகத்தை மூடிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.