(Reading time: 19 - 37 minutes)

எனவே அவரின் வீட்டை சுற்றி பார்க்கும் சாக்கில் அவளை திரும்ப பார்க்கும் சந்தர்பத்தை உருவாக்க முயன்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் தம்பி இது காரைக்குடி செட்டியார்களின் பாரம்ப்பரியத்தை பறைசாற்றும் வகையில் கட்டிய வீடு வீடு முழுக்க பர்மா தேக்கு மற்றும் , ஐரோப்பாவின் டைல்ஸ், முட்டை சுண்ணாம்புக் கலவை, இத்தாலியின் மார்பிள் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

Poogampathai poovilangal poottiya poovai

Poogampathai poovilangal poottiya poovai

இரண்டு அடுக்குகளைக் கொண்ட சதுர வடிவக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உருவானது. இந்தக் கோபுரத்தின் கூரைக்கு டைல் பயன்படுத்தப்பட்டுள்ளது.வீட்டின் முகப்பில் நீளமாகக் காணப்படும் திண்ணையும், ஆஜானுபாகுவான மரத் தூண்களும், அலங்கார வேலைப் பாடுகள் கொண்ட முகப்புக் கதவும் செட்டிநாட்டு வீடுகளுக்கு தனிக்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

உங்களை மாதிரி வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் இந்த வீட்டை பார்த்து பிரமித்துதான் போவார்கள்.வாங்களேன் நானே உங்களுக்கு சுத்தி காண்பிக்கிறேன் என்று கூட்டிக்கொண்டு போனார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கார்டனில் பார்த்த அவளை திரும்ப பார்க்கவே அவருடன் சென்றான் தீரன். ஆனால் வீட்டின் அமைப்பும் அழகும் அவனை அதில் லயிக்க செய்தது. அப்பொழுது வீட்டின் மேல்புறம் வந்தபோது ரங்கராஜனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது . நீங்க பாருங்க தம்பி நான் பேசிட்டுவருகிறேன் என்று அமைச்சர் நின்றதும் அந்த பக்கம் திரும்பிய தீரனின் காதில் பெண்களின் சிரிப்புச்சத்தம் கேட்டது திரும்பவும் அழைபாய்ந்த மனதோடு சத்தம் வந்த பகுதிக்கு சென்ற தீரனுக்கு தனது தோழிகளுடன் எதற்கோ ஒளிந்து விழையாடியபடி வந்த, அவன் ஜன்னல்வழி பார்த்தவள் பின்னால் அடிஎடுத்து வைத்தபடி அங்கிருந்த தூணை அறியாமல் தட்டி விழபோவதை கவனித்த தீரன் அவள் விழுவதற்குள் அருகில் வந்து அவளை பிடித்தான். பயத்தின் கண்மூடி தன்னை தாங்கி பிடித்தவனை யார் என்று அறிய மெல்ல கண் விழித்து பயத்தில் அவனை இறுக்கபிடித்தபடி முகத்தை பார்த்து உறைந்து நின்றாள் யாழிசை.

தன் கைவளைவில் மருண்ட விழிகளுடன் தன்னை பார்த்து பின் உறைந்து நின்ற யாழிசையின் உடலில் பதிந்திருந்த தீரனின் கை உணர்ந்த அவளின் மென்மை அவனை கிறங்க வைத்தது. மேலும் கையில் அழுத்தம் கொடுத்து தீரன் பிடித்ததும் தன்னிலையடைந்த யாழிசை துள்ளி அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாள்.

பேபி, வாட் எ கிளாசிக் பியூட்டி யூ ஆர். ஐ வான்ட் டு கிஸ் யூ.ஷால் யூ ப்ளீஸ்? என்றபடி அவன் முகம் நோக்கி அவன் குனிய முயன்றதும் அவனை பிடித்து தள்ளி கொண்டிருந்த யாழிசையின் கை அகன்று அவன் கன்னத்தை அறைந்தது.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.