“தூங்கினேன்ப்பா.”
ஏதோ நினைவு வந்தவராக பெரிய மகனின் கையைப் பற்றினார்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.”
அவன் கண் கலங்கியவாறே அவர் காலில் விழுந்தான். அவனை அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டார்.
“ஏம்ப்பா அழறே?”
“போன வருடம் இதே நாளில் நம்ம குடும்பம் எத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது?”
“யார் கண் பட்டதோ தெரியலை மகேன்.”
அவரும் வருந்தினார்.
தந்தையும், மகனும் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்தனர்.
“என்னப்பா? நீயும், கிருஷ்ணாவும் மகிழ்ச்சியா இருக்கீங்களா?”
“இருக்கோம்பா.”
தலை குனிந்தவாறே சொன்னான்.
“இது வரைக்கும் என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லைப்பா. மனதில் எந்த குறையும் இல்லாம நீ மகிழ்ச்சியா இருக்கனும்பா. இது உன் அம்மாவும், தம்பியும் ஆசைப்பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அம்மாவும் அவகிட்ட கேட்கப் போறாங்க. என்னவோ இப்பவே உன்கிட்ட சொல்லனும்னு தோணுது. உனக்குத் தெரியாம உன்னோட வாழ்க்கையில் நான் முடிவெடுக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு. அதனால்தான் உன்கிட்ட அனுமதி கேட்கிற மாதிரி இந்த வீடியோவில் பேசி வைக்கிறேன். ஆனாலும் இது உன் பிறந்தநாள் பரிசாதான் உனக்குக் கிடைக்கும்.”