“அண்ணா. கிருஷ்ணாவை முதன் முதலா பார்க்கும்போது ரொம்ப குட்டிப்பொண்ணா இருந்தா. எனக்கு தங்கை இல்லையேன்ற குறை ரொம்ப நாளா இருந்தது. அதை நிவர்த்தி செய்யற மாதிரியே அவ இருந்தா. முதல்ல அவ என்கிட்ட நெருங்கவே இல்லை. நான்தான் கட்டாயப்படுத்தி அவகிட்ட நட்பானேன். இதுவரைக்கும் அவளைப் பத்தி உனக்கு தெரியாதுண்ணா. அவ ரொம்ப பாவம். அவளைப் பத்தி தெரிஞ்சதும் அவளை நல்லா பார்த்துக்கனும்னு தோணுச்சு. ஆனால் எப்படின்னு தெரியலை.”
“அப்பதான் எங்கள் கல்லூரி விழாவிற்கு நீ வந்தே. அப்ப நீ கிருஷ்ணாவைப் பார்த்த பார்வையில் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. அதன் பிறகுதான் எனக்கு அந்த எண்ணமே வந்தது. அவளை என் அண்ணியாக்கிக்கனும்னு. அப்ப அவ சந்தோசமா இருப்பா. அதனால்தான் நான் அவளை அழைச்சுட்டு வந்தேன்.”
“ஆனால் நீ அவளை வெறுக்கிற மாதிரியே நடந்துக்கிட்டே.
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றுவிட்டாள்.
அவன் வெளியில் வந்தபோது அவள் இல்லை.
சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.
அங்கே ரவிச்சந்திரன் காத்திருந்தார்.
“இன்னும் சாப்பிடலையாப்பா.”
“இல்லப்பா. உன்னோட சேர்ந்து சாப்பிடலாம்னு இருந்தேன்.”
“சாரிப்பா.”
“எதற்கு மன்னிப்பு கேட்கிறே?”