(Reading time: 9 - 18 minutes)

“ஆசரமத்த நேர்ல பாத்தாதான் ஒரு ஐடியா கிடைக்கும் . . அதர்வைஸ்” என தோளை குலுக்கினான்.

“சாரு இங்க என்ன பண்ற?”  அவசரமாக அங்கே வந்த சூர்யா . .ஆகாஷை பார்த்ததும் . . கேள்விகுறியோடு சாருவை பார்த்தான்.

சிலரை முதல்முறை பார்த்ததும் பிடித்துவிடும் அதற்கு காரணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிடிக்காமல் போவதற்கும் அப்படிதான். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை.

“இது ஆகாஷ் அட்வகேட் . . இது சூர்யா டான்ஸர்” என ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தாள் சாரு.

சூர்யா ஆகாஷ் கைகுலுக்கினார்கள்  துளிகூட நட்பில்லாமல்.

“உங்க லவ்வர் கேஸ்தான் டீல் பண்றேன்” என ஆகாஷ் வேண்டுமென்றே ஆரம்பித்தான். சாரு தனக்கானவள் என்பதை உறுதிப்படுத்த

“உனக்கென்ன பிரச்சன?” என சூர்யா சாரு பக்கம் திரும்ப

“டேய் அவ என் லவ்வர்டா” என ஆகாஷ் மனம் சத்தம் போட்டது.

“சுவாதி கேஸ் இவர்தான் பாக்கப் போறார்” உறுதியான குரலில் சாரு பதிலளித்தாள்.

“சுவாதி” மற்றும் “உங்க லவ்வர்” என்ற வார்த்தைகள் சூர்யா முகத்தில் பல மாறுதல்களை வரவழைத்தது.  “அது முடிஞ்சி போன கேஸ் . . .” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே

“ஸ்டாப் இட் சூர்யா . . அக்கா எனக்கு வேணும் ” கண்ணீர் எட்டிப் பார்க்க சொன்னவளை

“இட்ஸ் ஓகே சாரு” என ஆகாஷ் அவளை சமாதானப்படுத்தினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சூர்யா கோபத்துடன் வெளியேற “டேய் உன் லவ்வர் யாரு என் லவ்வர் யாருனு உனக்கு கிளாஸ் எடுக்கறதுக்குள்ள நுரை தள்ளுதே” என ஆகாஷ் மனம் புலம்பினாலும்.

“சாரு ரிலாக்ஸ்” என டிஷ்யூ பேப்ரை அவளுக்கு கொடுத்தான்.

“ஆகாஷ் நீ எனை லவ் பண்றியா?” சாரு நேருக்கு நேராக ஆகாஷை பார்த்துக் கேட்டுவிட்டாள்.

சதுரகிரி மலை

நான்கு வேதங்களும் மலைகளாக சங்கமித்த இடம்.

சுற்றியுள்ள மலைகள் சதுரவடிவில் அமைந்திருக்கின்றன.

இப்படி பல பெயர் காரணங்களை தன்னுள் தாங்கிக் கொண்டுள்ள அதிசய இடம். இன்னமும் மின்சாரத்தை உணராத இடம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி.

மலைகள் அனைத்தும் சிவலிங்கமாக பாவிப்பதால் எந்த மலையில் ஏறும் போதும் காலணி அணிய மாட்டார்கள். அங்குள்ள மண் கல்  போன்றவற்றை மிதிப்பதால் காலின் அடிப்பகுதியிலுள்ள நரம்புகள் தூண்டிவிடப்பட்டு ரத்த ஓட்டத்தை சீர் ஆக்கும்.

சுவாமிஜி குறிப்பிட்ட சில சீடர்களுடன் மலை ஏறினார். ஏறுகையில் எதிர்பட்ட சிறுஅருவியில் சுவாமிஜி மற்றும் சீடர்கள் குளித்து மானசீகமாய் இறைவனை வேண்டினார். பின்னர் தாங்கள் கொண்டு வந்த மூங்கில் கூடையில் சில செடிகளின் வேர் பூ இலை என ஆராய்ந்து எடுத்தனர்.

அவர்கள் அறியா வண்ணம் சுவாதி பின் தொடர்ந்தாள். அவர்கள் எடுத்த இடத்தில் சிறியதாக தனக்கு மட்டுமே தெரியும் வகையில் அடையாளக்குறியிட்டாள்.

தொடரும் . .

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.