(Reading time: 9 - 18 minutes)

நான் காதலிச்சது உன்ன மட்டும் தான்....  இத நீ நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம் ரிஷி.....

ஆனா, இந்த பட்டம் என்ன பெத்தவளுக்கு பொருந்தும்...... அவ ஒரு தப்பானாவா  ...  என்று கூறியவள் தரையை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

இந்த வார்த்தையை கூறும் போது கீதாவின் வேதனையை பார்த்த ரிஷியால் தாங்கமுடியவில்லை.

கீதாவுக்கு  ஆறுதல் சொல்ல எண்ணி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவனை அங்கேயே நிற்குமாறு கூறினாள்.

உன்ன லவ் பண்ணும்போது போது என் அம்மாவை பத்தி சத்தியமா எனக்கு தெரியாது.... 

அப்படி தெரிஞ்சு இருந்த உன்ன நான் கண்டிப்பா லவ் பண்ணி இருக்கமாட்டேன்.... உன் சொத்துக்காக நான் உன்ன லவ் பண்ணல.....

ஒரு தப்பானாவா வளோட பெண்ணைய கல்யாணம் பண்ணிக்க எந்த வீட்லையும் சம்மதிக்க மாட்டாங்க....

அதான் நான் படிக்குறதா காரணாமா சொல்லி உங்கள விட்டு பிரிஞ்சு போய்ட்டேன்......

கண்ணீருடன் நிமிர்ந்து ரிஷியை பார்த்தவள், உங்க கேள்விக்கான எல்லா பதிலும் நான் சொல்லிட்டேன்....

இப்ப நீங்க இங்க இருந்து போலாம்.... என்று கூறியவளின் பேச்சை கேளாமல் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்த ரிஷி அவளை நெருங்கினான்.

அப்பொழுதுதான் அந்த விபரீதமும் நடந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தனது ஹண்டபகி யில் தற்காப்புக்காக வைத்திருக்கும் கத்தியை எடுத்த கீதா.... தன் இடது கை மணிக்கட்டு பகுதியில் வெட்டி கொண்டாள்.

இதோட உங்களுக்கும் எனக்குமான உறவு முடிந்தது ரிஷி என்று உறுதியுடன்  கூறியவள்......

கையில் இருந்து ஊத்தும் இரத்தித்தின் அளவு அதிகம் ஆனதால் தரையில் சரிந்தாள்.....

இம்முறை கீதாவை ரிஷி முழுவதுமாக இழந்து விடுவேன்னு என்ற பயத்தில் அவளை அணைத்துக்கொண்டான்....

வெள்ளை நிறத்தில் அவள் அணிந்து இருந்த உடை முழுவதும் இரத்த நிறத்தில் மாறி கொண்டு இருந்தது.

கீதா. சாரி டா..... என்ன பாரு..... ப்ளீஸ் என்ன பாரு டீ ....மறுபடியும் என்ன விட்டுட்டு போயிடாத.... என்று ரிஷி கதறினான்.

அரை மயக்கத்தில் இருந்த கீதா..... நான் தப்பானவா இல்ல ரிஷி..... லவ் யு ரிஷி என்று முனகினாள்.

அய்யோ..... இல்லடா நீ தப்பானவா இல்லாமா.... நான் உன்னோட பாஸ்ட் பத்தி தெரிஞ்சுக்க தாண்ட அப்படி சொன்னேன்..... தப்பு பண்ணிட்டேன் டா என்று தலையில் அடித்து கொண்டு அழுதான்.

ரிஷியின்  வார்த்தைகள் ஏதும் அவள் காதில் விழவில்லை....கீதா, கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டு இருந்தாள்.

தொடரும்

Episode # 11

Episode # 13

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.