(Reading time: 9 - 18 minutes)

எதுவாக இருந்தாலும் விடிந்த பிறகு பேசிக்கலாம்.... நான் தூங்க போறேன் உங்க ரூம்க்கு போங்க ரிஷி..... என்று அவனை பார்த்து கூறியும் ரிஷி எழுந்த பாடில்லை.

இழுத்து பிடித்து வைத்து இருந்த பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கீதாவை விட்டு செல்ல ஆரம்பித்தது.

ரிஷி மீது அளவுகடந்த கோபத்தையும் உண்டாக்கியது.... ரிஷியும் அதற்காக தான் காத்து கொண்டு இருந்தான்.

ரிஷி , உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்க?????? இப்படி என்  ரூமிலே அதும்  மிட் நைட்ல இப்படி என் பெட்ல நீங்க இருக்கறதா யாராவது பார்த்த  என்ன ஆகும்?????

என்ன அசிங்கமா நினைக்க மாட்டாங்களா????? என்று கோபத்துடன் கேட்டவளை அமைதியாக பார்த்தான் ரிஷி....

அசிங்கமா, நடந்துகிட்டா எல்லாரும் அசிங்கமத்தான் கீதா நினைப்பாங்க இதுக்கு 

 எதுக்கு நீ இவ்ளோ சீன் போடுறா????? ..... என்ன லவ் பண்ண என்கூட மூணு மாசம் வாழந்த.... 

படிக்க போறேன்னு பொய் சொல்லி என்கிட்ட சண்டை போட்டு பிரிஞ்சு போய்  சேகர் கூட மூணு வருஷம் வாழந்து இருக்க.... 

என்று அவன் பேசி முடிக்கும் முன்னரேயே ரிஷி என்று கத்தினாள் கீதா.....

அவளது கண்கள் ரெண்டும் சிவந்து இருந்தது.... இதோ பாருங்க என்ன பத்தி உங்க மனசுல என்ன வேணுன்னாலும் நினைச்சுக்கோங்க ..... 

இப்ப  இந்த நிமிஷம் இந்த ரூம்யா விட்டு வெளில போங்க..... என்று கண்களில் வழியும் கண்ணீருடன் கத்தினாள்.

ரிஷியிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை நேரிடையாக அவள் கேட்பாள் என்று நினைக்கவில்லை......  அவளது  வலியை   ரிஷியும் உணர்ந்துதான் இருந்தான்......

ஆனால், இந்த வலியை இப்போது கீதா அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று நினைத்தவன்....

மறுபடியும் சொல்றேன் ரொம்ம்ப சீன் போடாத..... சரி நான் கேட்குற ஒரு விஷயத்துக்கு பதில் சொல்லு நான் போயிடுறேன் என்று அவளை பார்த்தான்.

கீதாவும் என்ன என்பது போல அவனை பார்த்தாள்..... நீ விட்டா விட்டு போறேன்னு தானேயே லெட்டர் எழுதி வச்சுட்டு போனாயா???? என்று கேட்டவனுக்கு ஆமாம் என்பது போல தலை ஆட்டினாள்.

ஆனா, உன்ன ஒருத்தன் வந்து கூட்டிட்டு போயிருக்கான்.... யாரு அவன்?????? சொல்லு உன்மேல தப்பு இல்லைனாய என்கிட்ட ஏன் அவனை பத்தி சொல்லல????

ஏன்??? உன்ன பத்திகூட நீ ஏன் சொல்லல????? இளிச்சவாயன் மாட்டிகிட்டான் முடிஞ்சா அளவு சுருட்டிட்டு ஓடிடலன்னு நினைச்சியா?????

நான்தாண்டி முட்டாள்.... நீ ஒரு தப்பானவனு கூட யோசிக்காம காதலிச்சு என்று கூறி முடிக்கும் முன்னமேயே கீதா ரிஷியை அறைந்து விட்டாள்.

எந்த வார்த்தை தன்னை ரிஷி கேட்க கூடாது என்று நினைத்தாலோ....  அந்த வார்த்தையை இ ன்றுஅவன்  வாயாலேயே கீதா கேட்டு விட்டாள்.

இதற்காக தானேயே அவனை விட்டு பிரிந்து செல்லவும் முடிவு எடுத்தாள்..... கீதா, தனது முகத்தை மூடி கொண்டு கதறி அழுதாள்.

ரிஷியால், கீதா அடித்ததை நம்ப முடியாமால் தன் எதிரில் அழுது கொண்டு இருப்பவளை பார்த்தான்.

அவனுக்கு தெரிந்த கீதாவிற்கு கோபமேயே வராது.... ஏன் இவர்கள் காதலே ரிஷியின் அடியில் தான் ஆரம்பித்தது....

அப்பொழுது தான் கீதா பூவை விட மென்மையானவள் என்று அவனுக்கு புரிந்தது....

ரிஷியின், பெயர் சொல்லி கூட காதலிக்கும் போது அவள் கூப்பிட்டது இல்லை..... இந்த  வீட்டிற்கு வந்த பிறகு தான் அவள் ரிஷியின் பெயர் சொல்லி கூப்பிடுகிறாள்.

அது கூட, அவனிடம் இருந்து விலகத்தான்  என்பது ரிஷிக்கு  புரிந்தது. அதிலும் கூட ரிஷிக்கு ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது.

தனது முகத்தில் இருந்து கையை எடுத்த கீதா, ரிஷி இன்னும் நகராமல் இருப்பதை பார்த்து கோபமானாள்.

உனக்கு என்ன தெரியணும்?????? நான் யார்கூட போனேன்னு தானேயே???? ஒரு ஆழந்த மூச்சை இழுத்து விட்டவள் .....

எந்த விஷயம் ரிஷிக்கு தெரிய கூடாது என்று நினைத்தாலோ..... இன்று அதை ரிஷியிடம் கீதாவேயே கூறும் நிலைலயில் இருந்தாள். 

என்ன கூட்டிட்டு போனவன் என்னோட மாமான்னு தான் எல்லாரும் சொல்வாங்க.... நானும் கூட அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்...

ஒருவேளை, அவனேயே கூட என் அப்பாவாக இருக்கலாம் .... யாருக்கு தெரியும் என்று விரக்தியில் சிரித்தாள்.....

என்ன புரியலையா????? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு பட்டம் கொடுத்தியே... என் மனசு அறிஞ்சு அந்த பட்டம் எனக்கு பொருந்தாது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.