(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 17 - ஸ்ரீ

anbin Azhage

“கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலை கதிரின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்

நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

ருத்துவமனையை அடைந்து வீல் சேரில் அவளை அமர்த்தி உள்ளே செல்லும் வரையுமே அபினவ் அவளின் பற்றிய கரத்தை விடவேயில்லை..உள்ளே அழைத்துச் செல்லும் நேரம் அவளின் அந்த பார்வை அது இன்னதென கூற முடியாத ஒருவித பயத்தை விதைத்தது அவனுள்.

கையை பிசைந்தவாறே அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.நிமிடங்கள் நகர நகர மனம் பாடாய் படுத்தி எடுக்க சற்று நேரத்தில் அவனுக்கு வந்த அலைப்பேசி அழைப்பில் நிலையுணர்ந்தவன் திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டு மொத்தமாய் நடுங்கிப் போனான்.

“ஹலோ ஆன்ட்டி சொல்லுங்க என்ன இந்த நேரத்துல?”

“எங்கயிருக்க அபினவ்..பிஸியா?”

“திஷாக்கு பெயின் வந்துருச்சு ஆன்ட்டி உள்ளே கூட்டிட்டு போய்ருக்காங்க..என்னாச்சு சொல்லுங்க?”

“ஓ..சாரி இப்போ நா பண்ணிருக்க கூடாது இருந்தாலும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது..அகல்யாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கோம்..”

“என்ன சொல்றீங்க எப்படியிருக்கா இப்போ??”

“உண்மையை சொல்லாம இருக்க முடில..ஷி இஸ் கவுண்டிங் ஹெர் மினிட்ஸ்..”

“ஆன்ட்டி!!!!”

“நீ அங்க நிலைமையை பாரு அபினவ்..இங்க நா பாத்துக்குறேன்..எனக்குத் தெரிஞ்சு அகல்யா உன் மகளாவோ மகனாவோ தான் வர போறானு தோணுது..தைரியமா இரு திஷானியை பாக்குற பொறுப்பு இருக்கு உனக்கு..”

கண்கள் அதுவாய் நீரை நிரப்ப ஆரம்பிக்க இமை சிமிட்டி கண்ணீரை கலைத்தான்.நீண்ட பெரு மூச்சை வெளியிட்டவன்,”சரி ஆன்ட்டி நீங்க பாத்துகோங்க இங்க டெலிவரி முடிஞ்சவுடனே நா அங்க வரேன்..ப்ரார்த்தனை பண்ணறத தவிர வேற என்ன பண்ணணும்னு எனக்கு தெரில..எதுவாயிருந்தாலும்..”,அதற்கு மேல் பேச நா எழாமல் தொண்டை அடைத்தது.

“நா உனக்கு கால் பண்றேன்..அவ தினம் தினம் படுற கஷ்டத்துக்கு இதுவே நிம்மதி அபினவ்..புரிஞ்சுக்கோ..நா வச்சுட்றேன்..”

அடுத்த முக்கால் மணி நேரம் கடந்திருக்க உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் அபினவின் காதை எட்டியது அடுத்த இரண்டு நிமிடங்களில் இரண்டாவது அழுகுரல்.குடும்பமே தெய்வத்தை மனதார வேண்ட அபினவிற்கு அழுகையை தவிர ஒன்றும் செய்ய தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அதே நேரம் அகல்யா அங்கு மீளா உறக்கத்தை தழுவியிருந்தாள்..குழந்தைகளை குளிப்பாட்டி அவர்களிடம் எடுத்து வந்த நர்ஸ் பொண்ணும் பையனும் பிறந்திருக்காங்க..பொண்ணு தான் முதல்ல இந்த உலகத்துக்கு வந்துட்டாங்க..என்று கூறி சிரித்து அனைவரிடமும் குழந்தையை காட்டினர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இரண்டும் அப்படியே அச்சு அசல் அபினவின் ஜாடையில் ரோஸ் கன்னங்களோடு கண்திறக்க சிரமப்பட்டு அந்த பிஞ்சு கைகளை லேசாய் அசைத்தது.

பார்த்த அனைவருக்குமே அப்படியான ஆச்சரியம் அதெப்படி இப்படி ஒரு உருவ ஒற்றுமையென..பையன் சிறிதே சிறிதளவு திஷானியை போல் தோன்றினான்.

அபினவ் தன் ஒற்றை விரலால் லேசாய் அவன் கன்னம் வருட கையை அப்படி இப்டியாய் முகத்தின் அருகில் அசைத்தான்.

மகளை பார்த்தவனுக்கு அத்தனை நேரம் மனதை அழுத்திய பாரமெல்லாம் உடைத்தெறிந்து வெளிவர வேகமாய் அதேநேரம் மென்மையாய் அவள் கன்னத்தில் இழ்பதிக்க மீசையின் குறுகுறுப்பில் தூக்கம் கலைந்ததில் ஓ வென கத்த ஆரம்பித்திருந்தாள்.

திஷானியை அறைக்கு மாற்ற சற்றே மயக்த்தில் இருந்தவளை விட்டு அங்கு இங்கு நகராமல் கையை பிடித்தவாறே அவளையே பார்த்திருந்தான்.

சற்று நேரத்தில் விழிதிறந்தவள் அவனின் கையை அழுத்தமாய் பற்ற வேகமாய் எழுந்தவன் அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்திருந்தான்.

கண்களின் கண்ணீர் அவள் கன்னம் தொட மெதுவாய்,”அபிப்பா…”

“செத்துட்டேன்டீ மூணு பேரையும் பாக்குறதுக்குள்ள..அதுவும் உள்ளே போகும்போது ஏன்டீ அப்படி ஒரு பார்வை பாத்துட்டு போன..”

“திரும்ப உங்களை பாப்பேனோ மாட்டேனோனு பயந்துட்டேன் அபிப்பா..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.