(Reading time: 21 - 41 minutes)

“பைத்தியம் உன்னை அப்படி விட்டுருவேன்னு நினைச்சியா..அந்த நிம்மதியெல்லாம் உனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்காது..”

“பாப்பா??!!”

சற்றே அவளைவிட்டு நகர்ந்தவன் குழந்தைகளின் தொட்டிலை அவளருகில் நகர்த்தினான்.

“என்ன பண்ணி வச்சுருக்க பாரு நீ கேட்ட மாதிரியே ரெண்டும் என் ஜாடையில தான் இருக்கு..ஏன்டீ இப்படி பண்ற?!!”

ஆர்வமாய் பார்த்தவள் குழந்தைகளின் தலை முதல் கால் வரை பதட்டமாய் ஆராய்ந்தாள்.பின்பே நிம்மதி பெருமூச்சோடு முகத்தில் பார்வையை பதித்தாள்.

அவள் எண்ணவோட்டம் உணர்ந்தவனோ திருந்தமட்டியா என்ற பொருளோடு தலையை இடவலமாய் அசைத்தான்.

பேச்சை மாற்ற எண்ணியவளாய்,”பையன் என்ன மாதிரியும் இருக்கான்ப்பா கொஞ்சம்..”

“ம்ம் ஆமா ஆமா கொஞ்சமே கொஞ்சம்..”என்று மென்னகைத்தான்.

அதன்பிறகு அவளை ஓய்வெடுக்க கூறிவிட்டு வெளியே வந்தவன் தன் அலைப்பேசியை எடுக்க தன் மகள் பிறந்த அதே நேரத்தில் அங்கு அகல்யாவின் உயிர் பிரிந்து விட்டதாய் குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஏனோ அத்தனை இன்னல்களையும் தாண்டி அகல்யாவின் ஆத்மா தன் மகளாய் தன்னிடமே வந்துவிட்டாள் என்று தான் தோன்றியது அவனுக்கு.அங்கிருந்த ரெஸ்ட் ரூமில் புகுந்து கொண்டவன் குளிர்ந்த நீரால் முகத்தை அடித்து தன்னை ஆசுவாசப்படுத்த முயன்று சில நிமிடங்களில் வெற்றியும் கண்டான்.

நிர்மலமான முகத்தோடு பெரியவர்களிடம் வந்தவன் உணர்ச்சிற்ற குரலில் விஷயத்தை கூறினான்.அவன் நிலை தெரிந்தாலும் அதை பெரிதுபடுத்தி விடக்  கூடாது என்ற காரணத்தால் அவர்களும் அமைதி காத்தனர்.

டுத்த ஒரு வாரத்தில் திஷானியும் குழந்தைகளும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.சிசேரியன் என்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க நிறைவே சிரமப்பட்டாள்.கைகளில் வைக்கவும் முடியாமல் படுத்தவாறு கொடுக்க கூடாது என்றாலும் அவளால் முடியாத காரணத்தால் அதை முயற்சி செய்ய குழந்தையின் கால் அசைவில் தையில் இட்ட இடம் வலி கொடுக்க துடித்துதான் போனாள்.

ஒற்றை குழந்தையே அத்தனை சிரமம் எனும் போது இரட்டையர்கள் இன்னுமே படுத்தி எடுத்தனர்.ஒன்றின் அழுகையில் மற்றொன்று விழித்து அழும் இதற்கு உணவு கொடுப்பதற்குள் அது ஏக சத்தத்தில் கதற ஆரம்பிக்கும்.

அபினவோ தன்னவளின் நிலை கண்டு நொந்து போனான்.குழந்தைகளை கவனிப்பதோடு அவள் உடம்புமே தேறி வர வேண்டுமே என்ற கவலை அவனுக்கு.டாக்டரிடம் கேட்டு பால் பவுடர் கேட்டு அதை பழக்கப் படுத்தியே ஆக வேண்டும் என பிடிவாதமாய் கூறிவிட்டான்.

இரண்டு மூன்று வேளை மட்டும் அவளிடம் உணவிற்காக குழந்தைகளை கொடுக்கச் சொன்னான்.

அப்படி இப்படியாய் ஒருமாத காலம் கடந்திருக்க 30வது நாளில் பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அதற்குள் திஷானி மாமியார் மற்றும் அன்னையின் கவனிப்பில் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

அன்று காலை குழந்தைகளை தயார் செய்து தானும் தயாராகி அமர்ந்திருக்க வேலைகளுக்கு நடுவில் அபினவ் அறைக்குள் அவளுக்காக பாலோடு வந்தான்.

அதை வாங்கிக் கொண்டவள்,”அபிப்பா நம்ம குழந்தைகளுக்கு தான் பேர் வைக்க போறாங்க நியாகம் இருக்கா?இப்போ வர நீங்க ஒரு பேரும் சொல்லாம இருக்கீங்க..என்ன செலெக்ட் பண்ணிருக்கீங்க..”

தன்னவளை ரசனையாய் ஏறிட்டவன் அருகில் அமர்ந்தவாறே,”திஷா பேபி..அது உன் வேலை நீ என்ன பேர் வைக்குறியோ அதான் முடிவு..எத்தனை தடவை சொல்லிட்டேன் உன்கிட்ட..என்னை கேக்கவே கேட்காத..அதனால தான்இன்னும் பெர்த் சர்டிபிகேட் கூட அப்ளை பண்ணாம இருக்கேன் எல்லார் முன்னாடியும் நீ சொல்லும் போது தான் நானும் தெரிஞ்சுக்க போறேன் நம்ம பட்டூஸ் பேரை..சோ சீக்கிரமே டிஸைட் பண்ணிடு..”என்றவாறு கன்னத்தில் இதழ்பதித்து வெளியில் வேலையை கவனிக்கச் சென்றான்.

சில நிமிங்களில் குழந்தைகளோடு தம்பதி சகிதமாய் அமர பூஜை முடிந்து ஐயர் குழந்தைகளுக்கான பெயரை கேட்க அபினவ் திஷானியை ஒருவித ஆர்வத்தோடு பார்த்தான்.

சிறிதாய் புன்னகைத்தவள் அவனை பார்த்தவாறே,”அகல்யா,அகில்”,என்று கூறியது தான் தாமதம் சூழ்நிலை கருதி அபினவ் தன்னை சீர்படுத்திக் கொள்ள சாரதாவோ கண்கலங்கியே விட்டார்.

அபினவ் அதன் பின் ஒரு வார்த்தைகூட பேசவில்லை அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அனைத்தும் நல்லபடியாய் முடிந்து திஷானி அறைக்குள் செல்ல அப்போதும் அவன் வரவில்லை.அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அறை வாசலில் நின்று அவளே குரல் கொடுத்து அழைத்தாள்.

உள்ளே வந்தவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தவள் பொய் கோபத்தோடு அவனை பார்க்காது அமர்ந்திருக்க வந்தவனும் ஒன்றும் கூறாமல் அவளருகில் அமர்ந்தான் சில நொடிகள் அவன் வாய்திறக்காமலே இருப்பதை கண்டு கோபமாய் திரும்பியவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.