(Reading time: 17 - 33 minutes)

மாலையில் தீரனை சந்தித்துவிட்டு ப்ராஜெக்ட் ரிசல்ட்டை சப்மிட் செய்த மாதவன் வீட்டை அடைவதற்கு முன்பே திரும்ப தீரனை ஹோட்டல் இருந்த தெருவில் சென்று காத்திருந்து பிக்கப் செய்துகொண்டு ஊட்டி சென்று சந்திக்க வேண்டிய ஆள்பற்றிய விவரத்தை கூறிய இமாமியின் உத்தரவை நிறைவேற்றியவன் அதுவரை செய்த வேலைகளை தீரனுக்கு ஆசையாகத்தான் செய்தான்.

ஆனால் நேற்று ஊட்டி பங்களாவில் வைத்து யாழிசையை நான் சந்தித்து பேசனும் என்று என்று தீரன் கூறியதுமே மாதவனுக்கு அவனிடம் வேலை செய்வது பிடிக்காமல் போய்விட்டது. ஏனெனில் ப்ராங்கும் தீரனும் இருக்கும் இடத்தில் அழகான பெண்களும் இருப்பர் என்று அவன் கேள்விபட்டிருந்தான் .

(ஆனால் பிராங் இருக்கும் இடத்தில் தீரனும் இருக்கவேண்டி இருக்கும் என்றும் பிராங்கின் பணத்திற்கு அவனின் அருகில் மொய்க்கும் பெண்கள் தீரனிடம் அவனின் தோற்றம் மற்றும் திறமையால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு நெருங்க முன்வருபவர்களை தீரன் துச்சமாக மதிப்பான் என்பது மாதவன் அறியாத ஒரு விஷயம் ) எனவே தீரனும் பெண் மோகம் உள்ளவன் என்றே அவன் நினைத்திருந்தான்.

எனவே அப்படிப்பட்ட ஒருவனின் பார்வையில் தமிழ் குடும்பத்துபெண் விழுவதை மாதவன் விரும்பவில்லை. மேலும் அவன் அவளிடம் நெருங்க, தானே உடன் இருந்து உதவவேண்டும் என்பதை அவனால் ஜீரணிக்க இயலவில்லை .

இருந்தபோதிலும் தீரனின் ஆழுமையில் இருக்கும் தன்னால் அவனை எதிர்த்து சுண்டுவிரலை கூட அசைக்க முடியாது என்பதையும் புரிந்துவைத்திருந்தான் மாதவன்.

எனவே கடனே... என்று அவனுடன் வந்து யாழிசையின் இருப்பிடத்தையும் அவள் கல்லூரி பஸ் ஏறவரும் இடத்தையும் காண்பித்துவிட்டு அவள் தொலைவில் வருவதை கண்ட தீரனின் சொல்படி காரை அவள் வரும் பாதையில் நிறுத்தி வைத்தான்.

இந்நிலையில் காரினுள் அவளை இழுத்துக்கொண்டு அமர்ந்த தீரன் தான் காரோட்டிக்கொண்டிருகும் நேரத்தில் யாழிசையிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்து அதிர்ந்தவன் பின் தீரனின் பேச்சைகேட்டு ஆசுவாசமடைந்தான்.

உடல்வெடவெடக்க கண்களில் கண்ணீருடன் இருகரம் கும்பிட்டபடி என்னை விட்டுடுங்க என்று அவள் கூறியதும் தீரன் அவளின் கூம்பிய கையை பிடித்து தன கன்னத்தில் அவள் கரம் கொண்டு அறைந்தவன்.

சாரி... சாரி... பேபி. உன்னிடத்தில் வேறுயாரும் இருந்திருந்தால் நான் அவளின் வாயை சட் பண்ண சீக்சில் ஸ்லாப் கொடுத்திருப்பேன்.உன்னை என்னால் ஹர்ட் செய்ய முடியாது பேபி. உன்னிடம் ஸ்லாப் வாங்கத்தான் என்றபடி அவள் அறைந்த கன்னத்தை தடவிக் கொண்டே மை சீக்ஸ் வெயிட் பண்ணுது என்று கூறினான். உன்னிடம் நான் பேசவரும் விஷயத்தை காதுகொடுத்து கேட்காமல் கத்திகொண்டிருந்த உன்னை காம்டவுன் செய்வதற்கே கிஸ்...செய்தேன் என்று ஹஸ்கியாக கூறினான்.

அவன் கூறுவதை கேட்டு உதடு துடிக்க அவனின் செயலில் தான் அவமானப்படுத்தப்பட்டதாய் உணர்ந்த யாழிசை கூறினாள், இப்படி நீ என்னை களங்கப்படுத்துவதற்கு பதில் என்னை நீ அடித்தே இருக்கலாம் இப்படி என்னை கடத்திக்கொண்டு போவதுமட்டும் எங்க வானவராயர் அய்யாவிற்கு தெரிந்தால் நீ எவ்வளவு பெரிய கொம்பன் என்றாலும் உன்னை தண்டிக்காமல் விடமாட்டார் என்று படபடவெனே பொரிந்தாள்.

அவள் கூறியதில் களங்கப்படுத்தாமல் ,பெரிய கொம்பன், தண்டிக்காமல் போன்ற பல தமிழ் வார்த்தைகள் அவனுக்கு புரியவில்லை என்றாலும் அதற்கான விளக்கத்தை அப்பொழுது அவளிடம் கேட்க்க அவன் முயலவில்லை.

ஆனால் யாழிசையிடம் என் டாடியிடமே என்னை (என்ன சொன்ன தண்டிக்க தட் மீன்ஸ் எனக்கு தெரியவில்லை.) சொல்லபோகிறாயா பேபி. உன்னை நான் எதற்கு மீட் செய்து பேசமுயன்றேன் தெரியுமா? உன் வானவராயர் அய்யாவிடம் அவங்க பர்ஸ்ட் வொய்ப் பத்மினி அதாவது மை மாம் குடுக்கச்சொன்ன சிலவற்றை, உன்னை மீடியேட்டராக வைத்து அவரிடம் சேர்க்க நினைத்தேன். தென், மை மாம்மின் கடைசி ஆசை அவரின் மகனான என்னை அவரிடம் சேர்க்க நினைத்ததே. ஆனால் பிறந்ததில் இருந்து டாட் யாரென்று தெரியாமலே சிங்கிளாக கடைசிவரை ஸ்டான்ட் செய்து என்னை மாம் கவனித்துகொண்ட காரணத்தினாலோ என்னவோ புதிதாக டாட் என்ற சொந்தத்தை என்னால் அக்சப்ட் செய்ய முடியவில்லை.

ஆனால் என் மாம் இறந்தபின்பு எனக்கென்று இருக்கும் ஒரு சொந்தத்திற்கு இந்த உலகில் நான் இருப்பது தெரியாமல் இருப்பதை என் அம்மா விரும்பவில்லை. எனவே என் அப்பாவிடம் என்னை அடையாளம் காட்டவேண்டும் என்ற தாட் எனக்குள்ளும் சிறிதளவு டெவலப் ஆனது .

ஆனால் மை பேட் லக், அதற்கும் எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்று தோன்றவில்லை என்றான்.

அவன் சொல்வதை கேட்ட யாழிசை இன்னும் கோவத்துடன் நீ சொல்வதை நான் நம்பமாட்டேன் என் அய்யாவின் மகன் இதுபோல தரம்தாழ்ந்த செயலை செய்யமாட்டான் என்று கர்ஜித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.