(Reading time: 11 - 22 minutes)

னாலும் அந்த் அதிர்ச்சியை மறைத்துக் கொண்ட பாலா.. “என்ன சாத்விக்.. சுஜனாவை நீங்க தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தணும், ஆனா தெரியாத மாதிரி கேக்கறீங்க.. உங்களை ரிஸீவ் பண்ண தான் அவங்க இங்க வந்திருக்காங்க..” என்று கூறவும்,

சுஜனா என்ற பேரைக் கேட்டதும் அவள் யாரென்று அவனுக்கு தெரிந்துவிட்டது. அவள்  அலைபேசியில் பேசிய போதே, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை சொல்லிவிடலாம் என்று நினைத்தவன், தன் தந்தையை கவனத்தில் நிறுத்தி, எதையும் அவசரமாக செய்துவிட வேண்டாம் என்ற முடிவோடு அவளிடம் பிறகு பேசுவதாக கூறி அலைபேசி அழைப்பை துண்டித்தான்.

அடுத்து அவளிடம் பேசாமல் அவன் இருந்ததிலேயே அவளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்க, அவளோ இப்படி அவனை அழைத்து போக இந்த இரவு நேரத்தில் வந்திருப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதில் எரிச்சலடைந்தவனாக,

“இவங்களை போட்டோல பார்த்தது தான், நேர்ல பார்க்கவும் சட்டுன்னு கண்டுபிடிக்க முடியல..” என்று பாலாவிடம் கூறியவன், பின் சுஜனாவை பார்த்து,

“நான் என்னோட பி.ஏ க்கு போன் பண்ணி சொல்லிட்டேன் சுஜனா.. அவர் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.. எதுக்கு தேவையில்லாம உங்களுக்கு கஷ்டம்.. நாம இன்னொரு முறை மீட் பண்ணலாம்.. இப்போ நீங்க வீட்டுக்கு போங்க..” என்றான்.

மற்ற இருவரின் முன்னிலையிலும் அவன் அப்படி சொல்லவும் திரும்ப ஒருமுறை அவள் முகம் வாடிவிட்டது. அதை மறைக்க முயற்சித்தவளாக,  முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவைத்து சிரித்தப்படியே,

“அதனால என்ன சாத்விக்.. உங்க பி.ஏ வரட்டும் அப்புறம் நான் கிளம்பறேன்..” என்றாள்.

அதற்கு மறுப்பு சொல்ல நினைத்தவன், பின் பாலா மற்றும் இன்னொரு ஆடவன் உடன் இருப்பதால் அவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அமைதிக் காத்தான். இருந்தும் “இந்த பன்னீர் ஏன் இன்னும் வரல..” என்று கடுப்பானான்.

“சாத்விக் இது அஜய்.. சுதர்ஷன் க்ரூப் ஆப் கம்பெனி தெரியுமில்ல, அதோட சென்னை ப்ரான்ச் மேனேஜிங் டைரக்டர்..” என்று பாலா அறிமுகப்படுத்தியதும், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

“சுதர்ஷன் க்ரூப் ஆப் கம்பெனியோட சேர்மன் விபாகரனை ரிஸீவ் பண்ண தான் நாங்க ரெண்டுப்பேரும் வந்தோம்.. அப்போ தான் சுஜனாவை பார்த்தோம்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுஜனாவும் அஜயும் காலேஜ்மெட்டாம், அப்புறம் சுஜனா என்னோட வைஃப் ரூபினியோட ப்ரண்ட்..” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஓ அப்படியா..” என்று சாத்விக் புன்னகைக்க,

“அதுமட்டுமில்ல சாத்விக்..  கூடிய சீக்கிரம் சுஜனா அப்பாவும் நானும் பிஸ்னஸ்ல பார்ட்னரா இணையறோம்.. கூடவே விபாகரனும் தான், உங்களுக்கும் சுஜனாவுக்கும் மேரேஜ் முடிஞ்சா நீங்களும் ஒருவிதத்துல அந்த கம்பெனிக்கு டைரக்டரா ஆகிடுவீங்க.. சோ எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.. அதனால நீங்க விபாவை பார்த்துட்டு தான் போகணும்..” என்று பாலா சொல்லவும்,

இதிலெல்லாம் சாத்விக்கிற்கு ஈடுபாடு இல்லையென்றாலும், பாலா சொன்னது போல் இந்த திருமணம் நடக்க போவதில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டாலும், விபாகரனை பற்றி கேள்விப்பட்டிருப்பதால்,

“ஓ அதனாலென்ன பார்த்துட்டா போச்சு..’ என்றான்.

அதற்கேற்றார் போல் திரும்ப விமானம் தரையிறங்குவது குறித்து அறிவிப்பு வர, நால்வரும் விபாகரனுக்காக காத்திருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விபாகரன் வரவும், அங்கிருந்தே பாலா, அஜயை கவனித்தவன், இருவருக்கும் பொதுவாக கையசைத்தான். அதன்பின் தான் அவர்களோடு நின்றிருந்த சாத்விக்கை கவனித்தான். உடனே புன்னைகையோடு இருந்த அவன் முகம் மாறியது.

அவர்கள் அருகில் வந்ததும், “ஹாய் மச்சான்..” என்று பாலாவை அணைத்து விடுவித்தவன்,

“ஹாய் அஜய்..” என்று கூறியப்படியே அஜய்க்கு கைகுலுக்கினான்.

“ஹே விபா இது யாருன்னு தெரியுதுல்ல.. சார்மிங் ஸ்டார் சாத்விக்.. உன்னை பார்க்க தான் வெய்ட் பண்றாருடா..” என்று பாலா கூறியதும்,

“ஹலோ மிஸ்டர் விபாகரன்..” என்று சாத்விக் கையை நீட்டினான். விபாகரனோ பதிலுக்கு கைகொடுக்காமல் அப்படியே நின்றிருந்தான்.

மையல் தொடரும்..

Episode # 04

Episode # 06

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.