தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்
அவனின் ஆக்ரோசத்தில் கன்னத்தில் விழுந்த அடியில் ஒருநிமிடம் ஒருநிமிடம் உறைந்துபோய் நின்ற வகுளா அடுத்தகணமே ஆக்ரோசத்தை தத்தெடுத்துகொண்டாள்.
என்ன தைரியமிருந்தால் என்னை நீ கைநீட்டி அடிக்கலாம்...., என்றபடி ஆக்ரோசமாக அவனின் சட்டையின் காலரின் இருபக்கமும் பிடித்த வகுளாவின் இரண்டு கைகளுகிடையில் தனது கைகளை நுழைத்து தீரன் அவளின் பிடியை விட வைத்தான்.
பின் அவளின் கழுத்தை பிடித்து தள்ளிக்கொண்டே தப்பு செஞ்ச உனக்கே இவ்வளவு கோபம் வருதே பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வளவு கோபம்வரும். உன்னுடைய செயல் என்னுடைய இமேஜை ஸ்பாயில் செய்வதை வருத்தத்துடன் சும்மா வேடிக்கை மட்டும் பார்க்க நான் என்ன ஏசுவா? அல்லது கையாலாகாதவனா? என்று கூறிக்கொண்டே சுவற்றோடு அவளை சேர்த்து அழுத்தினான்..
அப்பொழுது தற்செயலாக அங்கே வந்த பத்மினி தீரனின் ஆக்ரோசமான தோற்றத்தில் வகுளாவின் கழுத்தில் கைவைத்தபடி அவளை சுவற்றோடு சேர்ந்து அழுத்திக்கொண்டு இருப்பதை பார்த்து திகைத்தவள் பின் கோபத்துடன் தீரா... என்று கத்தினாள்.
பத்மினியின் சத்தத்தில் அவளின் புறம் திரும்பிய தீரன், மாம் இவ என்ன செய்தாள் என்று தெரியாம அவள்பக்கம் நீங்க பேசமுயலாதீர்கள்...! என்று கர்ஜித்தான்.
அதற்கு பத்மினி, அவள் எதுவேண்டுமானாலும் செய்திருக்கட்டும் ஆனால் அதற்கு நீ அவளிடம் இவ்வாறு நடந்துகொள்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது, என் மேல் ஆணை இப்போ நீ அவளை விட்டுவிடனும் என்று அவனின் கோபத்திற்கு குறையாத அளவில் கோபத்துடன் தீரனுக்கு பதில் கொடுத்தாள்.
உடனே தீரன் வகுலாவின் கழுத்தில் இருந்த கையை அவளை வெறுப்புடன் பார்த்தபடி எடுத்தான்.
மறுநிமிடம் வேகமாக பத்மினியிடம் வந்த வகுலா தனது கழுத்தை தேய்த்துகொண்டே கோபம் குறையாத குரலில் ஆண்டி பட்டுமாமி சொன்னதுபோல் உங்க சன் முரடண்தான்... ரவுடிதான்... இதுதெரியாமல் நான் இவனை கல்யாணம் செய்யநினைத்ததுக்கு எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்டார் உங்க மகன் என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும், தீரன், நீ என்னுடன் என்கேஜ் ஆகியிருப்பதற்கு முன்னாள் எப்படி இருந்திருந்தாலும் நான் அதை பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன், ஆனால் என்கூட என்கேஜ் ஆனபிறகு பப்ளிக் பிளேசில் பிராங்குடன் நெருக்கமாக இருந்திருப்பதையும் அவனுடன் ஒன் நைட் ஸ்டே பண்ணியதையும் என்னால் மனிக்கவே முடியாது.., இனி உன்னை என்னால் கல்யாணம் செய்யமுடியாது. உன் மூச்சு காற்று கூட நான் இருக்கும் இடத்தில் இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். முதலில் இங்கிருந்து போய்விடு என்று கர்ஜித்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பத்மினிக்கு அவர்களின் உரையாடலில் மூலம் தீரன் எதனால் இவ்வளவு கோபப்படுகிறான் என்று புரிந்தது இருந்தபோதிலும் .
ஒரு பெண்ணின் மேல் அதுவும் தனது உயிர் தோழி விசாலியின் மகளின் மேல் தன் மகன் சாட்டும் குற்றச்சாட்டை பத்மினியாள் நம்ப முடியவில்லை.
மேலும், என்னதான் தான் அவனை பொத்தி வளர்த்தாலும் அவனின் தந்தயைபோலவே அவனும் சந்தேக நோய்க்கு ஆளாகிவிட்டானோ...! இது என்ன பரம்பரை வியாதிமாதிரி, பரம்பரை குணமா? என்று தீரனின் மேல் கோபமே கொண்டாள்.
எனவே கோபத்துடன் தீரா வாயை மூடு. என் விசாலியின் மகளையே சந்தேகப்படுகிறாயா? நீ இப்படி இருப்பாய் என்று தெரிந்திருந்தால் நானே அவளுடன் உன்னுடைய கல்யாணத்தை முடிவு செய்ததை தடுத்திருப்பேன். ஒரு பெண்ணை நீ கூறியவார்த்தை எந்தளவு நோகடிக்கும் தெரியுமா? முதலில் உன் வார்த்தைக்காக அவளிடம் மன்னிப்புகேள் என்று கண்டிப்புடன் கூறினாள்.
தீரன் தனது அம்மாவின் வார்த்தையில் மேலும் காயமுற்றான். தீரன் வகுலாவின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தான்! என்கேஜ் ஆன பிறகு அவளும் தன்மேல் ஆசையாகத்தானே இருந்தாள். நேரமின்மை காரணமாக இருவரும் நாள் முழுவதும் ஒன்றாக சுற்றவில்லை என்றாலும் சந்தித்த நேரங்களில் ஆசையாக தன்னுடைய தழுவல், முத்தங்களுக்குள்ளும் அவளும் ஆவலுடன் மூழ்கித்தானே போனாள்...!.
மேலும் வகுலாவிடம் தான் எல்லைகளை கடக்க அவள் சற்றும் தடை விதிக்கவில்லையே. நெருக்கத்தை அதிகப்படுத்தவே அவள் முயற்சிசெய்திருந்தாள்.
ஆனால் நான்தான் எல்லைகளை கடக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டேன்.
கல்யாணத்திற்கு பின்பே அவளை மொத்தமாக எடுத்துகொள்ள விரும்பினேன், அதுவே அவளுக்கு தான் செய்யும் மரியாதை என்று ஓரளவுக்குமேல் போகாமல் என்னை கட்டுபடுத்தி கொண்டேன்.
அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்ததுதான் தன் தவறோ? என்று இப்பொழுது அவனுக்கு எண்ணத் தோன்றியது.
அதற்காக உண்மையான லவ் என்மேல் இருந்தால் எப்படி அவளால் வேறு ஒருவனுடன் முடியும்? தன்மேல் அவளுக்கு இருந்தது லவ் இல்லையோ வெறும் லஸ்ட் தானோ என்ற எண்ணமே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது. ஏனோ லவ் இல்லாத லஸ்ட் அவனுக்கு அருவெறுப்பாக இருந்தது. வகுலாவின் மீது கொண்ட லவ்வினாலேயே அவளின்மேல் ஆர்வமும் ஆசையும் அவனுக்கு உண்டானது.