ஆனால் தற்போதைய அவளின் நடத்தையை தெரிந்தகொண்டவனுக்கு அவளின் மேல் இருந்த ஆசை விலகி கோபம் ,வெறுப்பு ,மற்றும் ஏமாற்றம் முதலியவை உண்டாது.அந்தகோபத்துடனேயே.
மாம்.., யாரிடம் நான் மன்னிப்புகேட்கனும் இவளிடமா....? என்றவன், அங்கு ஓரமாக நின்றிருந்த இமாமியிடம் வேகமாக சென்றவன் அவனின் கையில் வைத்திருந்த மொபைலை பறித்தான். அதில் பிஸ்னஸ் நியூஸ் உள்ள இமேகசீனில் இருந்த அந்த போட்டோவுடன் இருந்த செய்தியை அவளிடம் காட்டினான்.
அதில் வகுலாவும் பிராங்கும் பப்ளிக் பிளேசில் நெருக்கமாக இருந்தபோட்டோவும் முத்தமிட்டுக் கொண்டிருந்த போட்டோவும் இருந்தது. அதன் அடியில் பிஸ்னெஸ் மேன் பிராங் அவனின் நண்பனும் மற்றும் பிஸ்னஸ் பார்னர் & அட்வைசருமான தீரமிகுந்தனின் பியான்சியுடன் டேட்டிங் என்று விமர்சனம் இருந்தது.
அதன் சாரம்சத்தை வாசித்துப்பார்த்த பத்மினிக்கு தனது தோழியின் மகளை தன் மகனுக்கு மனைவியாக்கி தனது வாழ்கையின் இக்கட்டான காலத்தில் பக்கபலமாக இருந்த தோழி விசாலியிடம் பெற்ற நன்றி கடனை நல்லவிதமாக வகுலாவை வாழவைப்பத்தின் மூலம் தீர்க்க நினைத்த தனது கனவுகோட்டை தகர்ந்துவிடுவதை கண்டாள்.
இனி தீரனை தனது நன்றிகடனுக்காக அவளை திருமணம் செய்துகொள் என்று கூறுவது அபத்தமானது என்று அவளுக்கு புரிந்தது. மேலும் அவ்வாறு கெஞ்சி கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யவைப்பதற்கு அப்பாற்பட்டவர்கள் இன்றைய சமுதாய பிள்ளைகள் என்ற நிதர்சனத்தை பத்மினி உணர்ந்தே இருந்தாள்.
வாழ்க்கையில் யாருக்கும் நன்றிகடன் மட்டும் பட்டுவிடக்கூடாது. அவ்வாறு பட்டுவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கைமுழுவதும் நம் மனம் அடிமையாகிக் கிடக்கும் .
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. (107) விளக்கம்: தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. (108) விளக்கம்: ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. (110) விளக்கம்: எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.
இவ்வாறு பத்மினி தான் விசாளியிடம் பட்ட நன்றி கடனையும் அவ்வாறு உதவிய அவளின் நடப்பை வகுலாவின் இந்த மோசமான செயலை மன்னிக்காமல் தீரனை கட்டாயப்படுத்த இயலாத தனது நிலையை எவ்வாறு தோழியிடம் விலக்குவேன் என்று மருகி நின்றாள்.
இந்த திருப்பத்தை வகுலா எதிர்பார்க்கவில்லை. இப்படி போட்டோ ஆதாரத்துடன் பத்மினியின் தான் பிடிபட்டதும் ஒருநிமிடம் வெட்கித்தான் போய்விட்டாள் வகுலா, ஆனால் மறுநிமிடமே நிமிர்வாக இதிலென்ன தப்பு என்றமாதிரி அவளின் பேச்சு இருந்தது.
நான் பிராங்கிடம் நடந்துகொண்டதை விமர்சிக்க தீரனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை ஆண்டி , ஏன்னா நான் அவனை அவாய்ட் செய்ததில்லை. அவனின் பியான்ஷி நான் என்று வெறுமனே வாய்வார்த்தையாக மட்டும் சொல்லிக்கொண்டு என்னுடன் நேரம் செலவிடாமல் இருந்தது தீரன் தான்.
ஆனால், பிராங் எவ்வளவு பெரிய பணக்காரர் நான் ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் அவராகவே கூட்டிகொண்டு போனார்.என் கண் ஆசையாக பார்த்ததெல்லாம் கேட்காமலேயே வாங்கிகொடுத்தார். அவருடன் நான் செல்வதை பொறாமையாக மற்றவர்கள் பார்த்தனர் ஆனால் அவர் என்னை ஆசையாக பார்த்தார். என் அருகாமைக்கு மயங்கினார் எனக்கும் தீரனுக்கும் நிச்சயம் ஆகாததற்குமுன் அவர் என்னை பார்த்திருந்தால் கண்டிப்பாக என்னிடம் மேரேஜ் ப்ரோபோஸ் செய்திருப்பதாக கூறினார்.
மேலும், என் அருகாமையில் பியான்ஷி என்ற நிலையில் இருந்தும் கூட மயங்காமல் என்னுடன் இணையாமல் ஒதுக்கிய தீரன் எங்கே? என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னை தொடாமல் இருக்க முடியாமல் என்மேல் காதலாக இருக்கும் பிராங் எங்கே!. என்னை லவ் செய்யும் பிராங்கிடம் என்னை கொடுத்தது எனக்கொன்றும் தவறாக தெரியவில்லை. இதற்காக என்னுடன் கல்யாணத்தை வேண்டாம் என்று தீரன் மறுப்பதால் எனகொன்றும் நட்டமில்லை. இவ்வளவு நடந்தபிறகும் என்னிடம் மேரேஜ்க்கு ப்ரொபோஸ் செய்யாமல் பிராங் இருப்பதற்கு காரணம் தீரனுடன் எனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமே.
இப்பொழுது தீரனுக்கும் எனக்கும் இடையே உள்ள திருமண நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது என்றால் உடனே பிராங் என்னை மேரேஜ் செய்துகொள்ள சம்மதித்துவிடுவார்.எனக்கு இத்திருமணம் நின்றதால் நட்டம் கிடையாது என்று கூறினாள் வகுலா.
அவள் அவ்வாறு கூறியதும் என்ன சொன்ன.... பிராங்கிற்கு உன்மேல் லவ்வா....? என்று கேட்டுவிட்டு ஹ..ஹ..ஹ...என்று சத்தமாக சிரித்தான் தீரன்.
அவன் உனக்கு மட்டும் கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து உன்னோடு மட்டும்தான் லவ் என்ற போர்வையில் லஸ்ட் அனுபவித்தான் என்று நினைக்கிறாயா?
அவனுக்கு எத்தனையோ இதுமாதிரி லஸ்ட் வந்துபோனதை நானும் பார்த்திருக்கிறேன் என்றான்.