வழக்கமான உதட்டோர மென்னகையோடு கடலை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து தலை திருப்பி அவள் கண்களை ஏறிட்டான்.
“நீ சொன்னதெல்லாம் கேட்க கேட்க இப்போ இந்த செகண்ட் இறுக்கமா என் தோள்ல சாய்ச்சு உனக்கு எல்லாமுமா நா இருக்கேன்னு சொல்லனும்னு தோணுது வெண்பா..ஆனா..”
“பரவால்ல சொல்லுங்க திவா எதுவாயிருந்தாலும்..”
“நீ சொன்ன மாதிரி எனக்கும் கொஞ்ச நாளாவே மனசு ஒரு நிலையில் இல்ல தான்.யார் மேலேயும் தோணாத ஒருவித அன்பு உன்மேல..வாழ்க்கையின் சரிபாதியா நல்லது கெட்டதுல நல்ல தோழியா கடைசிவரை நீ என்கூட இருக்கணும்னு தான் என் ஆசையும்.
ஆனா என் ஆசையை தாண்டினதா என் பொறுப்புகள் இருக்குறதுனால தான் ஒரு தயக்கம் உன்கிட்ட என் மனசை வெளிப்படையா சொல்லவிடாம தடுக்குது.
உனக்கே தெரியும் என் வேலை தான் எனக்கு எல்லாமே..அதுக்கு அடுத்ததா சிந்தாம்மா..திவ்யாந்த்னு ஒருத்தனுக்கான அடையாளமே இந்த இரண்டும் தான்.
இதுல நிறைய ப்ளஸும் இருக்கு சில மைனஸும் இருக்கு.எனக்கு எல்லோரையும் மாதிரி 9 அவர்ஸ் வொர்க் கிடையாது வாரத்துல ரெண்டு நாள் லீவ் கிடையாது.நடு ராத்திரில எமர்ஜென்சினாலும் நா ஓடனும்.திடீர்னு மூணு நாள் லீவு எடுக்க முடியும் சில நேரம் மாசம் மொத்தமும் வேலை இருக்கலாம்.
ஒரு டாக்டரா இதெல்லாம் சாதாரணம் என் கடமையும் கூட ஆனா உனக்கான நமக்கான நேரம்ங்கிறத நாம டிசைட் பண்ண முடியாது.நீ எதிர்பாக்குற பல விஷயங்களை அந்த நேரத்துல என்னால பூர்த்தி பண்ண முடியாம போகலாம்.
ஆனா உன் மீதான என் அன்பும் காதலும் என் ஆயுசுக்கும் இப்படியே தான் இருக்கும்.நீ ஒருவிதத்துல உறவுகளுக்காக ஏங்குறனா நா உறவுகளே இல்லாம வளர்ந்து உன்னை தான் என்னோட மொத்த வாழ்க்கைக்கான உறவா நினைக்குறேன்.
சோ சாதாண காதலர்கள் தம்பதிகளுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷமும் ஊடலும் கூடலும் நமக்குள்ள இருக்கலாம் இல்லாமயும் போகலாம்.எதுவாயிருந்தாலும் ஏத்துக்குற பக்குவம் உனக்கு இருக்கானு நீதான் முடிவு செய்யணும்.
இதை எதையுமே சொல்லாம என் காதலை மட்டுமே முன்னிருத்தி நம்ம வாழ்க்கையை தொடங்க முடியும் ஆனா அது பின்னாடி அர்த்தமில்லாம போனா நம்ம ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான்.அதுக்காக தான் இத்தனை விளக்கம் கொடுக்குறேன்.
அடுத்ததா சிந்தாம்மா அவங்க என்ன பெத்த அம்மா இல்லையே தவிர இந்த ஜென்மத்துல அவங்க தான் என் அம்மா உன் மாமியார்.எக்காரணத்தை கொண்டும் அவங்க நம்மள விட்டு தள்ளி போக கூடாது போகவும் விடமாட்டேன்.
நீ என் மனைவியா வர்றது அவங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம் சந்தோஷம் அதே மாதிரி உன்னாலயும் அவங்களை ஏத்துக்க முடியுமானு எனக்கு தெரில வெண்பா..
நா உன்னை தப்பு சொல்லல இது தான் திவ்யாந்த்னு நீ புரிஞ்சுகிட்டு அப்பறமும் உன் முடிவுல மாற்றம் இல்லனா அடுத்த முகூர்த்தத்துலயே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.
உனக்கு இதெல்லாம் கஷ்டம்னு நினைச்சாலும் நோ ப்ராப்ளம் கண்டிப்பா என்னோட முதலும் கடைசியுமான காதல் நீயா தான் இருப்ப.யோசிச்சு நீயே பொறுமையா சொல்லு..”
என்றவன் அவளையே பார்த்திருக்க மயக்கத்தில் இருந்து விழித்தவளாய் அவனையே பார்த்திருந்தவள் முகம் திருப்பி கடலை வெறித்தாள்.
முகத்தில் மெலீதாய் ஒரு நாணச் சிவப்பு,”திவா இந்த உண்மையான முகமூடி இல்லாத மனசுக்காகவே உங்களோட வாழ ஆசைப்படுறேன்.
நீங்க சொன்ன எல்லாமே புரியுது கண்டிப்பா பெஸ்ட் வைப்பா இருக்க ட்ரைப் பண்றேன்.அதேநேரம் நல்ல மருமகளாவும் இருப்பேன் நிச்சசயமா..
நீங்க சிந்தாம்மாட்ட பேசிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..”
“உன் பேரண்ட்ஸ்கிட்ட பேச வேணாமா?”
சற்றே வாடிய முகத்தை மறைத்தவள்,”அதெல்லாம் நா பாத்துக்குறேன் நீங்க டேட் பிக்ஸ் பண்ணுங்க..”
இத்தனை பெரிய விஷயத்திற்கும் அவனிடம் வந்த பதில் மெல்லிய புன்னகை சற்றே பற்கள் தெரிய அவ்வளவே..
தன் கரத்தை அவளை நோக்கி நீட்ட முகம் மலர தன் கரத்தை அவனோடு இணைத்துக் கொண்டவள் அவனையே பார்த்திருக்க என்ன நினைத்தானோ அவள் விழி கலந்தவன் மென் குரலாய்,
“பீடத்திலேறிக் கொண்டாள் – மன
பீடத்திலேறிக் கொண்டாள்
கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா”