(Reading time: 8 - 16 minutes)

“ஹ்ம்ம் சரி மாமா... எதுக்கும் நாம வேற எதாச்சும் வழிலயும் பார்க்கணும்... ஒரு வருஷமா இப்படியே போயிட்டு இருக்குது....”

“அக்காவும், மாமாவும் வந்ததும் பேசிட்டு அப்பறம் எப்படி பண்றதுன்னு யோசிக்கலாம்... சரி வா உங்கத்தை அடுத்த அர்ச்சனை ஸ்டார்ட் பண்றதுக்குள்ள சாப்பிட போய்டலாம்....”,சண்முகம் அழைக்க யோசனையுடனே அவருடன் சென்றான் ஷக்தி.....

டேய் சதீஷ்... நீ இங்க வந்து மூணு மாசம் ஆகுது.... இன்னும் மோட்டு வளையே பார்த்துட்டு உக்கார்ந்து இருக்க.....”

“இல்லைடா சுந்தர்... எனக்கு இந்த ஊர் பிடிக்கவே இல்லை.... அப்பா, அம்மா எல்லாம் விட்டுட்டு இருக்க கஷ்டமா இருக்குடா....”

“ஏண்டா ராமேஸ்வரம் பக்கம்தானே உன் ஊர்... நினைச்சா நீ போயிட்டு வரலாமே...”

“என் வீட்டு நிலைமை தெரிஞ்சே இப்படி பேசறியே.... ட்ரைன் டிக்கெட் வாரா வாரம் செலவழிச்சு போகறா மாதிரியா இருக்கு என் நிலைமை.... அப்பா கண்டிப்பா சொல்லிட்டாங்க... காலேஜ் லீவ் விட்டா மட்டும்தான் வீட்டுப்பக்கம் வரலாம்ன்னு....”

“சரிடா உனக்கே உன் வீட்டு நிலைமை தெரிஞ்சிருக்கே... அப்பறம் ஏன் மூஞ்சி தூக்கி வச்சிருக்கே,,,,”

“இல்லைடா இது வரை படிச்சது எல்லாம் தமிழ் மீடியம்.... கஷ்டப்பட்டு எப்படியோ NEET-ம் தமிழ்ல எழுதி  பாஸ் பண்ணி சீட் வாங்கிட்டேன்... ஆனா இப்போ பாடம் மொத்தமும் இங்கிலீஷ்ல இருக்கு... ஒண்ணுமே புரியலை... வகுப்பும் இங்கிலீஷ்லதான் எடுக்கறாங்க.... பாதி நேரம் என்ன பேசறாங்கன்னே புரியலைடா.... எப்படி நான் படிச்சு பாஸ் பண்ணப் போறேன்னே தெரியலை...”

“டேய் இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க.... நான் படிச்சது மொத்தமும் இங்கிலீஷ் மீடியம்தான்... ஆனா எனக்குமே தலையும் புரியலை... காலும் புரியலை.... அதனால டோன்ட் வொர்ரிடா போகப் போக சரியாகிடும்.... அப்படியே இல்லாட்டாலும் நாம லெக்சரர்க்கிட்ட டவுட் கிளியர் பண்ணிக்கலாம்....”

“ஏதானும் பண்ணி ஒழுங்கா படிச்சே ஆகணும்டா... எங்கப்பா எனக்காக ஏகப்பட்ட கடன் வாங்கித்தான் படிக்க அனுப்பி இருக்காரு...”

“சரி அதையே நினைக்காத... நேத்தெல்லாம் வயித்து வலின்னு சொன்னியே... இப்போ எப்படி இருக்கு....”

“பரவா இல்லைடா....”

“இந்த ஒரு மாசத்துல உனக்கு நாலு வாட்டி இந்த மாதிரி வயித்து வந்திடுச்சு சதீஷ்... நாம போய் டாக்டர் பார்க்கிறது நல்லதுன்னு நினைக்கறேன்....”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா... வீட்டு சாப்பாடே சாபிட்டுட்டு கான்டீன் சாப்பாடு ஒத்துக்கலை போல இருக்கு... கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்....”

“சரி வா, நேத்து கிளாஸ்ல நடந்த நோட்ஸ் எடுத்து வச்சிருக்கேன்... அதை ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்....”,சுந்தர் கூப்பிட, சதீஷ் அரைகுறை மனதுடனே படிக்க அமர்ந்தான்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சாந்தியும் அவள் தோழியும் பேசியபடியே நடந்து வர அவர்கள் அருகில் பைக்கில் மிக வேகத்துடன் வந்த இளைஞன் ஒரு கையால் சாந்தியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் வெட்ட ஆரம்பித்தான்... அவன் பிடி மிக உறுதியாக இருந்ததால் சாந்தியால் அவனைத் தடுக்க முடியவில்லை... அவளின் தோழி அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து அவனை தடுப்பதற்குள் சாந்தியின் உடம்பில் பல இடங்களில் வெட்டு விழுந்து விட்டது.... அந்தப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் இந்த சம்பவத்தை பார்த்து அருகில் வருவதை கவனித்த பைக்காரன் சாந்தியின் கழுத்திலும், கையின் மணிக்கட்டிலும் அழுத்தமான வெட்டை கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டான்...

இரண்டே நிமிடங்களில் அனைத்தும் முடிந்து அவன் தப்பியும் ஓடி விட்டான்... தரையில் விழுந்த சாந்தியின் உடம்பில் அனைத்து பாகங்களில் இருந்தும் குருதி வழிய ஆரம்பித்தது.... கூட்டத்தில் இருந்த ஒருவர் அம்புலன்ஸிற்கு அழைக்க, அவர் அவர்களுடன் பேசி இடத்தை சொல்லும்போதே சாந்தியின் உயிர் சிறிது சிறிதாக பிரிய ஆரம்பித்தது....

அடுத்த இருவது நிமிடத்தில் போலீஸ் ஜீப்பும், அம்புலன்ஸும் வர சாந்தியின் உயிரற்ற உடலே அதில் ஏற்றப்பட்டது... சாந்தியின் தோழி இவையனைத்தையும் பார்த்து மயங்கி விழுந்து விட்டாள்.... அவளையும் சேர்த்து ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை நோக்கி பயணித்தது....

அங்கு முக்கிய உறுப்புகளில் ஆழமான வெட்டுக்குத்து விழுந்ததால் உடனடி மரணம் என்று டாக்டர்கள் தெரிவிக்க, அவளின் தோழி கண்விழித்து பேச காவலர்கள் காத்திருந்தார்கள்....

அடுத்த ஒரு மணி நேரத்தில் சாந்தியின் தோழி கண்விழிக்க அவளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், சாந்தியை அவர்கள் வீட்டருகில் இருக்கும் மணி தொல்லை செய்வது தெரிய, அவனை உடனடியாக காவல்துறை கைது செய்தது....

ஆனால் அவனின் அம்மாவும், அப்பாவும் அவன் தங்களுடன்தான் அன்று கோவிலுக்கு வந்தான் என்று வாதாடியும் ஒரு பலனுமில்லாம் போக... மணியின்மேல் FIR பதிவு செய்யப்பட்டு ஒரு வார கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது....  

தொடரும்

Episode # 03

Episode # 05

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.