'மித்ரா ஓக்கே சொல்லலன கௌவுதம் ரொம்ப வருத்தப்படுவான். அவன் வருத்தப்பட்டா என்னால தாங்கமுடியாது வெண்ஸ். அவன் ஆசப்பட்ட பொண்ணுகூட அவன் சந்தோசமா வழட்டும்னுதான் நானும் நினைக்குறேன். ஆனாலும் மனசு வலிக்குது'
'சரி உன் மனசு வலியப் போக்க என்ன செய்யலாம். ஹூம் இப்படிச் செய்யலாமா'
'எப்படி வெண்ஸ்'
'மித்ரா கௌவுதமுக்கு ஓக்கே சொன்னாலும் நீ மித்ராகிட்ட போய் கௌவுதமப் பத்தி தப்புத்தப்பா சொல்லி அவங்களப் பிரிச்சுவிட்டுட்டு நீ கௌவுதம கல்யாணம் பண்ணிக்க என்ன நான் சொல்றது'
'வெண்ஸ் என்ன சொல்ற நீ என்னால ஒரு நாளும் அப்படியெல்லாம் செய்ய முடியாது. கௌவுதம் சந்தோசத்தக் கெடுக்குற எதையும் நான் எப்பவும் செய்ய மாட்டேன்'
'ம்ம் தெரியுதுல. உன்னால இந்த விசயத்துல எதுவும் செய்ய முடியாது வெண்ணிலா. ப்ரியா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்த நாக்கை அடக்கி "அது நீங்களா சொல்லுவிங்கனு நினைச்சேன் கௌவுதம்" என்றாள்.
"ஹூம்..... மித்ராக்கு என்மேல அப்படி ஒரு எண்ணம் இல்லையாம் வெண்ணிலா. அவ என்ன ஒரு நண்பனா மட்டும்தான் பார்க்குறாளாம்" என்றான் கௌவுதம் இதை சொல்லும்போது அவன் முகத்தில் பெரிதாய் சோகமெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.