"ஓஓ....." என்றாள் வெண்ணிலா வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல்.
"ஆனா இனிமேல் வர்லாம்ல வெண்ணிலா. நான் என் காதலை மித்ராவுக்கு புரிய வச்சு அவள என்ன காதலிக்க வைக்கப்போறேன் வெண்ணிலா"
இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என வெண்ணிலாவிற்கு தெரியவில்லை. இதனால் பின்னால் வரப்போகும் பிரச்சனையை அறியாமல் கௌவுதமின் சந்தோசத்திற்காக "ம்ம் சரிதான்" என்றாள் வெண்ணிலா.
"என்ன வெண்ணிலா நீ நான் எப்பவும் ஏதாவது ஒன்னு சொன்னா நீ பதிலுக்கு பத்து சொல்லுவ ஆன என்னோட காதல் விசயத்துல மட்டும் ரொம்ப அளந்து அளந்து பேசுர உனக்கு என்ன ஆச்ச"
'அச்சச்சோ என்ன இவன் இப்படிக் கேக்குறான்' என ஒரு நிமிடம் யோசித்த வெண்ணிலா "ஆங்.... அது வந்து எனக்கு காதலப் பத்தி என்ன தெரியும் கௌவுதம். அதனாலத்தான் என்னால இந்த விசயத்துல ஒன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிப்பாக சந்தேகப்படுவார். ஏதாவது வாங்குவோம்' என்று கொஞ்சம் பொருட்கள் வாங்கினான்.
அவன் சிறிது நேரம் களித்து அந்த துணிக்கடைக்குள் சென்றபோது கார்த்திகாவும் அனிதாவும் அங்கு வேலை செய்பவரை ஒரு வழி ஆக்கிக்கொண்டிருந்தனர். மித்ரா ஒரு ஓரமாய் நின்று கடையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.