Page 4 of 4
இதுதான் சமயம் என்று பிரணவ் மித்ராவிடம் போய் "அவங்க கடைய புரட்டிப்போட்டு வாங்கிட்டு வரட்டும் அதுவரைக்கும் நாம வெளிய வெயிட் பண்ணுவோமா மித்ரா" என்றான்.
"ஆமா பிரணவ். எனக்கு இங்க எதுவும் வாங்கவேண்டியது இல்ல. இவங்க ரெண்டுபேரும் இன்னைக்கு புல்லா வாங்குவாங்கபோல எனக்கு கால் வலிக்குது நாம போய் எங்கேயாவது உட்காருவோம்" என்று பிரணவ்வுடன் வெளியே வந்துவிட்டாள்.
அந்த தளத்தின் நடுவே அழகுக்காக பெரிய சைசில் வட்ட வடிவில் திண்டு கட்டி அதன் நடுவே பூச்செடி வைத்திருந்தனர். மித்ராவும் பிரணவ்வும் அந்த திண்டில் இடைவெளிவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1202}