தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 07 - ராசு
சிவரஞ்சனி உறக்கத்திலிருந்து விழித்தாள்.
அவளது அறையில் படுத்திருந்தாள்.
கணவனைப் பிரிந்து அவள் வாடிப்போயிருப்பதை அறிந்த அவளது மாமியார் வடிவுதான் அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தாள்.
அவளே தனது சம்பந்திக்குப் போன் செய்து மருமகளை ஒரு இரண்டு நாட்கள் அழைத்துச் சென்று வைத்திருந்து அனுப்பி வைக்கச் சொன்னாள்.
“அண்ணி. என்னதான் சிவா வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உங்க மாப்பிள்ளையோட பிரிவை எண்ணி ரொம்ப வாடிப்போயிருக்கா. இந்த நே
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்துவிடுவாங்களா?
வீட்டினருக்கு மட்டும் தெரிய வேண்டிய விசயம் மத்தவங்களுக்கும் தெரிய ஆரம்பிச்சிடுமே?
இப்பவே எத்தனை பேரு வசந்தாவைக் கிண்டல் செய்யறாங்க?
அவ எத்தனை கூனிக்குறுகிப் போறா.
அதே நிலைமைதான் எனக்கும் வாய்ச்சிருக்கா?
அத்தை பாசமானவங்கன்னு நினைத்தேனே?