இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் அடிக்கடி மோதல் நடந்துகொண்டே இருக்கும்.
அதில் ஒரு கூட்டத்தில் இருந்த ஒருவனை மற்றொரு கும்பல் வெட்டிக்கொன்றது.
தலையைத் துண்டாக்கி, எடுத்துவிட்டு உடலைக் கூறுகூறாய் வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் கொலையாளிகள்.
அதுவும் இந்தக் கொலை பட்டப்பகலில் நடந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் அனைவரும் அச்சத்தில் இருந்தனர்.
எந்த அளவிற்கு மனதில் வஞ்சம் இருந்திருந்தால் உடலைக்கூறாக்கியிருப்பர்?
தலையை வேறு பந்தாடினார்களாம். எல்லாம் சினிமாவில் நடப்பது போல் இருந்தது.
அந்தத் தலை மட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டதை யாரோ வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தனர்.
அதைக் கொண்டு வந்து தன் அண்ணியிடம் காட்டிவிட்டான்.
அவனுக்கு அவளது பயம் பற்றித் தெரியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை இனி தனியே விடக் கூடாது என்று உறுதி கொண்டது.
மறுநாளே வந்திறங்கிய மகனிடம் திட்டவட்டமாய் சொல்லிவிட்டாள்.
அவனும் ஒத்துக்கொண்டான்.
இதோ இப்போது கிளம்பிவிட்டார்கள்.
மருமகள் இத்தனை தூரம் மகனுடன் தனியே போவது சரியில்லை என்று தோன்றவே தானும் துணைக்குக் கிளம்பிவிட்டாள்.